எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர். உலகக் கோப்பையுடன் அவர் கொடுத்திருந்த உற்சாக போஸ் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை அள்ளி இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் பிரான்ஸ் அணியுடன் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் விளையாடியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வீழ்த்தி இருந்தது. இந்தத் தொடரில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை மெஸ்ஸி வென்றார். மொத்தம் 7 கோல்களை அவர் உலகக் கோப்பை 2022 தொடரில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், அவர் அண்மையில் பண்பலை ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு முடங்கியதாக தெரிவித்துள்ளார். “எனது இன்ஸ்டாகிராம் பக்கம் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்படியே சில நாட்களுக்கு முடங்கி இருந்தது. அதற்கு காரணம் எனக்கு குவிந்த மெசேஜ்கள். மில்லியன் கணக்கில் இன்ஸ்டாவில் எனக்கு மெசேஜ் வந்திருந்தது. அதுதான் அதற்கு காரணம். அதே போல எனது இன்ஸ்டா கணக்கை நான்தான் நிர்வகித்து வருகிறேன். அதை நிர்வகிக்க தனியாக யாரையும் நான் பணி அமர்த்தவில்லை. எந்தவொரு நிறுவனமும் எனது கணக்கை நிர்வகிக்கவில்லை” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
________________
ரஹானே புதிய கவுன்டி அணியில் இணைகிறார்
ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஹைதரபாத் அணிக்கு எதிராக இரட்டைச் சதமும் அஸ்ஸாமுக்கு எதிராக 191 ரன்களும் எடுத்தார் ரஹானே. 7 ஆட்டங்களில் 634 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார். 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்தார். எனினும் 34 வயது ரஹானே, ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறார்.
கடந்த ஓராண்டாக இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவெடுத்துள்ளார் ரஹானே. லீசெஸ்டர்ஷைர் அணிக்காக கவுன்டி சாம்பியன்ஷிப் ஆட்டங்களிலும் 50 ஓவர் போட்டியிலும் விளையாடவுள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரஹானே, ஜூன் மாதம் முதல் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவார். இந்தப் பருவத்தில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி. புதிய அணி வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என்றார். இதற்கு முன்பு ஹாம்ப்ஷைர் கவுன்டி அணியில் விளையாடியுள்ளார் ரஹானே.
________________
எலும்பு முறிவால் இடது கையில் பேட் செய்த ஹனுமா விஹாரி..!
ஆந்திர அணி, இந்தூரில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக ரஞ்சிக் கோப்பை காலிறுதியில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆந்திரா 379 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. விஹாரி, பேட் செய்த போது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது. அவர் வலியை பொறுத்துக் கொண்டு பேட் செய்ய முயன்றார். இருந்தும் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த போது ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு உறுதி செய்திருந்தது.
அந்த அணிக்காக ரிக்கி பூஹி மற்றும் கரண் ஷிண்டே ஆகியோர் சதம் விளாசி இருந்தனர். முதல் இன்னிங்ஸில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்த போது விஹாரி பேட் செய்ய வந்தார். வழக்கமாக அவர் வலது கையால் பேட் செய்வார். ஆனால், காயம் காரணமாக அவர் இடது கையால் பேட் செய்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டை பிடித்தபடி விளையாடி இருந்தார். அந்த நிலையிலும் ஆவேஷ் கான் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி விளாசி அசத்தி இருந்தார். குமார் கார்த்திகேயா பந்து வீச்சில் ஸ்வீப் ஷாட்டும் ஆடி இருந்தார். 57 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவர் சர்நேஷ் ஜெயின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
________________
ஐபிஎல்லில் இப்படி நடக்காது: உ.பி. கிரிக்கெட் சங்கம் உறுதி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாண்டியா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்த ஆடுகளம் அதிர்ச்சியளிக்கிறது என்றார் பாண்டியா. அந்த ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 30 ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினார்கள். மேலும் எந்த ஒரு பேட்டராலும் ஒரு சிக்ஸரும் அடிக்க முடியவில்லை.
இந்நிலையில் உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒரு பேட்டியில் கூறியதாவது: லக்னோ மைதானத்தைக் கவனித்துள்ள இரு நிபுணர்களைப் பணியில் அமர்த்தப் போகிறோம். ஒருவர் ஆடுகளத்தையும் மற்றொருவர் மைதானத்தின் தன்மைகளையும் கவனித்துக்கொள்வார்கள். அவர்களுடைய சேவையைப் பெற இதர கிரிக்கெட் சங்கங்களின் அனுமதியைப் பெறவுள்ளோம் என்று கூறியுள்ளார். அதேபோல ஆடுகள வடிவமைப்பாளரை நீக்கியதையும் அவர் உறுதி செய்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


