முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது : ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      உலகம்
Putin 2023-03-02

Source: provided

டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து