முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைத்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

Source: provided

சென்னை : குழந்தைத்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ்  பணிகளை மத்திய  விரைந்து அரசு முடிக்க வேண்டும் என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது ,

தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 57,84,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து என்பது ஒரே தவணையில் அளிக்க கூடிய மருந்தாகும். இந்தியாவில் குடும்ப நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

நாகை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பொது மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். மரங்கள் அகற்றப்படவில்லை அதனால்தான் மதுரை எய்ம்ஸ் கால தாமதம் என குழந்தைத்தனமான, போலித்தனமான காரணத்தை கூறாமல் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து