முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவிற்கு செய்த கொடுமைகள் மூலம் தி.மு.க.வின் அசல் முகம் வெளிப்பட்டு விட்டது : சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2024      தமிழகம்
BJP 2024-03-19

Source: provided

சேலம் : ஜெயல்லிதா உயிரோடு இருந்த போது அவர்களுக்கு செய்த கொடுமைகள் மூலம் தி.மு.க.வின் அசல் முகம் வெளிப்பட்டு விட்டது என்று சேலத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 

தி.மு.க.வும், காங்கிரசும் பெண்களை கேவலப்படுத்தி இழிவாக நடத்துகிறார்கள். இதற்கு தமிழகமே சாட்சி. ஜெயல்லிதா உயிரோடு இருந்த போது அவர்களுக்கு செய்த கொடுமைகள் மூலம் தி.மு.க.வின் அசல் முகம் வெளிப்பட்டு விட்டது. பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. இந்த தேர்தலில் வழங்கும் தீர்ப்பு தி.மு.க.விற்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். 

தி.மு.க.வும் , காங்கிரசும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக உள்ளது. ஊழல், ஒரே குடும்ப ஆட்சி, இவர்கள் அதை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதனால் தான் காங்கிரஸ் வீட்டிற்கு போன பிறகு 5 ஜி தொழில்நுட்பம் வந்தது. தமிழகத்தில் 5-வது தலைமுறை ஆட்சிக்கு வர வேண்டும் என தி.மு.க.வினர் ஆசைப்படுகிறார்கள். இதற்கு முன்பு 2ஜி ஊழல் மூலம் உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்து விட்டனர். அவர்களின் ஊழலை சொல்ல ஒரு நாள் போதாது. தமிழகத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதியளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் இங்குள்ள அரசு அதில் எப்படி கொள்ளையடிக்கலாம் என திட்டம் போடுகிறது.

தமிழகத்தின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மூப்பனாரை பிரதமராக விடாமல் காங்கிரஸ் தடுத்தது. தேசிய அரசியலில் மிகப்பெரிய தலைவராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் பிரதமராக ஆகியிருக்கலாம். ஆனால் காங்கிரஸ் குடும்ப ஆட்சி தமிழரான அவரை பிரதமர் ஆக விடாமல் தடுத்து விட்டனர். பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் அரசியலில் நேர்மை என்பது இருந்தது. அவர் உருவாக்கிய மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து