முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் பிரச்சார சுற்றுப்பயணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  அக்கட்சியின் தலைமை கழகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதில் வருகிற 5-ம் தேதி மற்றும் 13-ம் தேதி ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது. 

அதன்படி வருகிற 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் கவுந்தம்பாடி, இரவு 7 மணிக்கு ஈரோடு பூந்துறை ரோடு, கஸ்பா பேட்டை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். 

13-ம் தேதி மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டம், மாலை 5.30 மணிக்கு தியாகதுருகம், கள்ளக்குறிச்சியிலும், இரவு 7 மணிக்கு ராணிப்பேட்டை எம்.ஜி.ஆர். திடல், ஆத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து