Idhayam Matrimony

இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி

புதன்கிழமை, 15 மே 2024      உலகம்
Israel 2024-05-15

Source: provided

 நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, பல மாதங்களாக மோதல் நடக்கிறது. காசாவை தொடர்ந்து, ரபாவிலும் இரு தரப்புக்கு இடையே சண்டை நடக்கிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் ரபாவில் உள்ள மருத்துவமனைக்கு ஐ.நா. அதிகாரிகள் வாகனத்தில் சென்றனர். அப்போது அந்த வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், வாகனத்தில் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர்.

விசாரணையில், உயிரிழந்த அதிகாரி இந்தியாவைச்சேர்ந்த வைபவ் அனில் காலே என்பதும், அவர் இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றியதும், 2022-ம் ஆண்டில், முன்கூட்டியே ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் தெரிய வந்துள்ளது.  இவர், இரு மாதங்களுக்கு முன், ஐ.நா., பாதுகாப்பு துறையில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து