முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      தமிழகம்
Mahadevan 2024-05-26

Source: provided

தி.மலை : சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

சென்னை ஐகோர்ட்டின்  தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி. கங்காபுர்வாலா கடந்த 23-ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து மூத்த நீதிபதியான மகாதேவனை பொறுப்பு நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதிமுர்மு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடந்த 24-ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார். 

இந்நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட நீதிபதி மதுசூதனன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் வரவேற்றனர். 

முதலில் அண்ணாமலையார் சன்னதி, பின்னர் உண்ணாமுலையம்மன் சன்னதியில் தலைமை நீதிபதி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து