எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி, குற்றால அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று பகலில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்தது. நேற்று விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தின் உள்ள பிரபல சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிக்கரை ஓரமாக யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேரம் செல்லச்செல்ல வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது.
நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் அருவி பகுதிகளில் உள்ள கைப்பிடி உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும், அருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கடைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. சிற்றாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு சிற்றாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தென்காசி வாழ் மக்களை மிரள வைத்துள்ளது.
இதற்கிடையே, பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் நுழைவதை தடுக்க, தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசியின் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குண்டாறு அணை நிரம்பியதால், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணைக்கு வரும் 345 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அனைத்து நீர்த்தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ


