எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார் . ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்காளதேசத்தத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு பெறுகிறார். இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
118 டெஸ்ட் போட்டிகளில், மேத்யூஸ் 44.62 சராசரியுடன் 8,167 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 200 ரன்கள் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்த 3வது வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளார்.
ஹம்பர்க் ஓபன்: ரூப்லெவ் முன்னேற்றம்
ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது . இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லூசியானோ டர்டேரி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் ரூப்லெவ் மோதுகிறார்.
கிரிக்கெட் மைதானம் திறப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தில் கோஜன் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் 4 மைதானங்கள், 3 டா்ப் வசதிகள் உள்ளன. வலைப் பயிற்சிக்காக 10 டா்ஃப் விக்கெட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவா் பி. அசோக் சிகாமணி தலைமை வகித்தாா். முன்னாள் இந்திய வீரா்கள் வி.வி. குமாா், சத்விந்தா் சிங் ஆகியோா் புதிய மைதானங்களை திறந்து வைத்தனா். திருவள்ளூா் ஆட்சியா் மு. பிரதாப், கோஜன் கல்விக் குழும தலைவா் ஜி. நடராஜன், துணைத் தலைவா் என். விஸ்வநாதன் முன்னிலை வகித்தனா். டி.என்.சி.ஏ. துணைத் தலைவா் ஆடம் சேட், செயலாளா் ஆா்.ஐ. பழனி, பொருளாளா் டிஜே. சீனிவாசராஜ், இணைச் செயலாளா் ஆா்.என். பாபா ஆகியோா் பங்கேற்றனா்.
ஆர்.சி.பி.: பில் சால்ட் விலகல்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. இந்த நிலையில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்நிலையில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு சில தினங்களில் குழந்தை பிறக்கவுள்ளதால் பிளே ஆப் சுற்றை தவறவிடுகிறார். இந்த முறையாவது ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்வதற்கு உத்வேகத்தில் இருக்கும் நிலையில் இவரது விலகல் ஆர்.சி.பி. அணிக்கு பின்னடைவாக இருக்கும். இவர் நடப்பு தொடரில் 9 போட்டிகள் விளையாடி 239 ரன்கள் குவித்துள்ளார்.
மீண்டும் ஜோஸ் ஹேசில்வுட்?
ஐ.பி.எல். 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நான்கு நாள்களில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக அந்த அணிக்காக விளையாடவில்லை.
இந்த நிலையில், தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜோஸ் ஹேசில்வுட் பிளே ஆப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது. பிளே ஆப் சுற்று வருகிற மே 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், ஜோஸ் ஹேசில்வுட் ஆர்சிபியுடன் மீண்டும் இணைந்தால், அந்த அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும். நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஸ் ஹேசில்வுட் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 13 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2025
23 May 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
23 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனையானது.
-
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
23 May 2025சென்னை: தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
இனி இனிப்பிலும் கூட 'பாக்' இல்லை: 'மைசூர் ஸ்ரீ’ என மாறிய மைசூர் பாக்
23 May 2025ஜெய்ப்பூர்; இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.
-
நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இ.பி.எஸ். வலியுறுத்தல்
23 May 2025சென்னை: நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
அவசரமாக தரையிறங்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்
23 May 2025புதுடெல்லி, சேதமடைந்த விமானத்தை தரையிறக்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்.
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்புப்படை விரைவு
23 May 2025கோவை: ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள்: ஜோ ரூட் புதிய சாதனை
23 May 2025நாட்டிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார்.
முதல் டெஸ்ட்...
-
தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்: சிங்கப்பூர் அமைச்சர் அறிவுரை
23 May 2025சிங்கப்பூர், தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் என சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நடுவர்களை அறிவித்த ஐ.சி.சி
23 May 2025லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இறுதிப்போட்டி...
-
பாக்.கிற்கு 1 பில்லியன் டாலர் ஏன்? சர்வதேச நாணய நிதியம் விளக்கம்
23 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானுககு 1 பில்லியன் டாலர் வழங்கியது தொடர்பாக நாணய நிதிக்கு விளக்கம் கேட்டுள்ளது.
-
தமிழகத்தில் ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு உறுதி தொடக்கக் கல்வி இயக்ககம் அறிக்கை
23 May 2025சென்னை: தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
-
ஏற்காட்டில் 48வது கோடை விழா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
23 May 2025ஏற்காடு: ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
-
வீழ்த்தவே முடியாத மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்
23 May 2025சென்னை: போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
23 May 2025டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
-
வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்: ராஜினாமா செய்ய முகமது யூனுஸ் முடிவு
23 May 2025டாக்கா, வங்கதேசத்தில் தேர்தலை விரும்பாத முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
-
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்காவுக்கான டெண்டர் வெளியீடு
23 May 2025சென்னை: ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
-
குன்னூரில் பழக் கண்காட்சி தொடக்கம்
23 May 2025குன்னூர், குன்னூரில் 65-வது பழ கண்காட்சி தொடங்கியுள்ளது.
-
பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் ஜூன் 3-ல் விரிவாக்கம்
23 May 2025சென்னை: பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் வரும் ஜூன் 3-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுகிறார்
23 May 2025புதுடெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று (24ம் தேதி )நடைபெற உள்ளது.
-
அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு
23 May 2025நெல்லை: டாஸ்மாக் விவகாரத்தை விசாரிப்பது போல், அதானி வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.
-
த.வெ.க.வின் சின்னத்தை தேர்வு செய்வதில் தலைவர் விஜய் தீவிரம்
23 May 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை தேர்வு செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிங்கம்புணரி குவாரி விபத்து: இருவர் கைது; உரிமையாளர் தலைமறைவு
23 May 2025சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
-
டெஸ்ட்: மேத்யூஸ் திடீர் ஓய்வு
23 May 2025சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார் .
-
மின்சாரத்துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை: அமைச்சர் சிவசங்கர்
23 May 2025பெங்களூரு: எதிர்வரும் ஐந்து முதல் ஏழாண்டுகளில் மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.