எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கோவை : தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். அதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி உள்ள கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது நேற்றுமுன்தினமே கேரளாவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்கள் அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினம் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகுதியில் அதிகபட்சமாக 35 செ.மீ. மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லாரில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. கனமழையால் கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆறு, வால்பாறை கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, பவானி ஆறு, ஆழியாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை மற்றும் சிறுவாணி அணை, ஆழியார் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பில்லூர் அணையில் நேற்றுமுன்தினம் திடீரென நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து இரவில் 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் குளிப்பதற்கோ, துணி வைப்பதற்கோ யாரும் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடுரோட்டில் முறிந்து விழுந்துள்ளன. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள். மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளதால் பல கிராமங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
ஊட்டிக்கு சுற்றுலா வந்த 15 வயது சிறுவன் மரம் முறிந்து விழுந்ததில் பலியானதை தொடர்ந்து முன் எச்சரிக்கையாக ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளும் தாங்களாகவே நீலகிரியில் இருந்து வெளியேறி வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைப்பயிர்த் தோட்டங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. நேற்று 2-வது நாளாக கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு நிற அதிகனமழை எச்சரிக்கை நீடிக்கிறது. இதனால் மழை பொழிவு மேலும் அதிகரித்து சேதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கன மழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலும் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் 2-வது நாளாக அங்கு சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
ஒரு வார காலம் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் தீவிரமடைந்து காணப்படுகிறது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ, மேல் பவானி 30 செ.மீ மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 21 செ.மீ அதி கனமழை பதிவாகியுள்ளது. ரத்னகிரி அருகே கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தெலுங்கானா பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மே 31-ந்தேதி வரை பருவமழை தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதி கனமழை வரை கொடுக்க கூடும். இருவேறு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் மகராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மும்பை மாநகர் உள்ளிட்ட இடங்களில் தொடங்க கூடும். அவ்வாறு தொடங்கும் நிலையில் அது கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இயல்பிற்கு முந்தைய தொடக்கமாக அமையும். அதேபோல கடந்த 53 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 18 hours ago |
-
ரிசர்வ் வங்கியின் தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
28 May 2025சென்னை, தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதியை பெற்று தந்த காவல்துறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் ஐந்தே மாதத்தில் நீதியை காவல்துறை பெற்று தந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்திருக்கிறார்: கனிமொழி எம்.பி.
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்திருக்கிறார் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
கன்னடம் மொழி குறித்து பேச்சு: கமலுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்
28 May 2025பெங்களூரு, தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று பேசிய கமலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி
28 May 2025சென்னை, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க.
-
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவு மீட்பு ஒரே வழி: திருவொற்றியூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
28 May 2025சென்னை, தமிழக மீனவர்களின் இன்னல்களை போக்க அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சதீவை மீட்புதான் ஒரே வழி என்று திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முத
-
சற்று குறைந்தது தங்கம் விலை
28 May 2025சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும்: துணை முதல்வர்
28 May 2025சென்னை, கமலின் குரல் மாநிலங்களவையிலும் இனி ஒலிக்கும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
28 May 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாக். பெண்
28 May 2025மும்பை, எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது - பிரதமர் மோடி
28 May 2025புதுடெல்லி, வீர சாவர்க்கரின் போராட்டத்தின் வரலாறை தேசம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
பேச்சுவார்த்தை தோல்வி: டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தம்
28 May 2025மீஞ்சூர், பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலீஜியம் பரிந்துரை
28 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
ஒரே போட்டியில் 3 வரலாற்று சாதனைகள் படைத்த கோலி
28 May 2025லக்னோ, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்தது.
-
மற்ற படங்களுக்கும் இசையமைக்கப் போகிறேன் - விஜய் ஆண்டனி
28 May 2025விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார்.
-
கரும்பு நிலுவைத் தொகை வழங்க உத்தரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகள் நன்றி
28 May 2025சென்னை, சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணம் நிலுவையின்றி முழுமையாக வழங்கிய முதல்வருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
-
அண்ணா பல்கலை., வழக்கின் தீர்ப்புக்கு இ.பி.எஸ். வரவேற்பு
28 May 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்கு இ.பி.எஸ். வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுடன் இணைந்தால் கனடாவுக்கு அதிநவீன பாதுகாப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
28 May 2025வாஷிங்டன், கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ம.நீ.ம. மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு: செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்
28 May 2025சென்னை, வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி: சென்னை மகளிர் நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு
28 May 2025சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்
-
மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
28 May 2025இம்பால், மணிப்பூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரிக்கு அடுத்த 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’
28 May 2025சென்னை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னி
-
தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம்: முதல்வர் உமர் அப்துல்லா கருத்து
28 May 2025ஸ்ரீநகர், பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெ
-
காசா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
28 May 2025காசா : உதவி மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 48 பேர் காயமடைந்தனர் என்று காசா அதிகாரிகள் தெரிவித்தனர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-05-2025
28 May 2025