முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் தி.மு.க.வில் இருந்து நீக்கம்

வியாழக்கிழமை, 29 மே 2025      தமிழகம்
DMK-Offces 2023 03 31

Source: provided

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். 

மதுரை மாநகராட்சி தி.மு.க. மேயராக இந்திராணி இருந்து வருகிறார். இவர் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.  மேயர் இந்திராணி பெயரளவுக்கு மேயராகவும், நிழல் மேயராக அவரது கணவர் பொன் வசந்த் செயல்பட்டு வருவதாகவும், மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் தலையிடுவதோடு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது. 

இந்நிலையில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்தை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பொன் வசந்த்,  அமைச்சர் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து வந்தார்.  இதனால் தனது மனைவி இந்திராணியை மேயராக்கினார்.  இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழனிவேல் தியாகராஜன், திடீரென்று நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றப்பட்டார். மேலும் கட்சி பொறுப்பில் இருந்தும் பழனிவேல் தியாகராஜன், தன்னை விடுவித்துக் கொண்டார்.  இந்த வசதியைப் பயன்படுத்தி மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த், பணிகளை டெண்டர் விடுவது, வார்டுகளுக்கு பணி ஒதுக்குவது என அனைத்து விவகாரங்களிலும் முழுமையாக தலையிட ஆரம்பித்தார்.

 இந்தச் சூழலில் மதுரை வரும் முதல்வரை   வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாநகரச் செயலாளர் தளபதி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் கடந்த 23-ம் தேதி காலை வெள்ளிக்கிழமை நடந்தது. இதே நாளில், இதே நேரத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் இந்திராணி ஏற்பாடு செய்திருந்தார்.  இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., சிபிஎம், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர்கள் துணையுடன் கூட்டத்தை நடத்தி  தீர்மானத்தையும் நிறைவேற்றி வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி விட்டனர்.

இது, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இதுகுறித்து கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றன.  அதனால், முதற்கட்ட நடவடிக்கையாகவே தற்போது மேயர் கணவர் பொன்வசந்த் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அடுத்தக்கட்டமாக மேயர் இந்திராணி மீதும் நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து