முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடவுள் தான் காப்பாற்றினார்: விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண் நெகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      இந்தியா
Lady 2025-06-13

Source: provided

அகமதாபாத் : விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார். கணபதி  (விநாயகப் பெருமான்) தான் தன்னை காப்பாற்றியதாக குரல் நடுநடுங்க கூறுகிறார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 12) மதியம்  லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய வாய்ப்பை தவற விட்டதால் பூமி சவுகான் என்பவர் உயிர் பிழைத்திருக்கிறார்.

குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த பூமி சவுகான், லண்டனில் கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெற்றோரைப் பார்ப்பதற்காக இந்தியா வந்த பூமி சவுகான், நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானத்தில் லண்டனுக்குப் பயணிக்க டிக்கெட் எடுத்திருந்தார். விமான நிலையத்துக்குச் செல்ல அவர் புறப்பட்டபோது அகமதாபாத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசலால் 10 நிமிடம் தாமதமாகிவிட்டது. அந்த விமானத்தில் சென்றே ஆக வேண்டும் என்பதற்காக அதிகாரிகளுடன் அவர் எவ்வளவோ பேசிப் பார்த்துள்ளார். எனினும், விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் தெரிவித்த பூமி சவுகான், “நான் 10 நிமிடத்தில் விமானத்தைத் தவறவிட்டேன். நான் கெஞ்சினேன், ஆனால் அவர்கள் என்னை ஏற அனுமதிக்கவில்லை. நான் மதியம் 1:30 மணியளவில் விமான நிலையத்தை விட்டு வெளியேறினேன். விமானம் சுமார் 1:38 மணியளவில் புறப்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அது விபத்துக்குள்ளானது. நான் என்ன உணர்கிறேன் என்பதை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

கடவுளுக்கு நன்றி. என் கணபதி என்னைக் காப்பாற்றிவிட்டார். என் உடல் உண்மையில் நடுங்குகிறது. என்னால் பேச முடியவில்லை. நடந்த அனைத்தையும் கேட்ட பிறகு என் மனம் இப்போது முற்றிலும் வெறுமையாக உள்ளது. இழப்பைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போனேன்.  ஏதோ காரணத்திற்காக, கடவுள் கணபதி   என்னை காப்பாற்றிவிட்டார். நான் ஏன் காப்பாற்றப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என்னைக் காப்பாற்றியவர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து