முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைப்பகுதியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025      தமிழகம்
Kurtalam 2024-11-04

தென்காசி, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் தொடர்ந்து ஒரு வாரமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலமான மே மாதத்திலேயே சாரல் மழை களைகட்டியது. தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் மாத தொடக்கத்தில் மழையின் தீவிரம் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று (ஜூன் 13) காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 38.40 மி.மீ., செங்கோட்டையில் 22 மி.மீ., அடவிநயினார் அணையில் 15 மி.மீ., கருப்பாநதி அணையில் 6 மி.மீ., ராமநதி அணையில் 3 மி.மீ., ஆய்க்குடியில் 2 மி.மீ. மழை பதிவானது.

மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமை இரவு முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றும் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இரண்டாவது நாளாக அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து