முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3 ரயில்வே கிராசிங் விபத்துகள் : மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்

புதன்கிழமை, 30 ஜூலை 2025      இந்தியா
Ashwini-Vaishnav 1

Source: provided

புதுடெல்லி : முன்றரை ஆண்டுகளில் 3 ரயில்வே கிராசிங் விபத்துகள் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி தெரிவித்துள்ளார். கடலூர் ரயில் விபத்து சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 3 ரயில்வே கிராசிங் விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

கடந்த 8-ந்தேதி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில், தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் விழுப்புரம்-மயிலாடுதுறை பிரிவு கேட் எண் 170-ல் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. 

இந்த விபத்து குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டு ஜூலை 20-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ரயில்வே கேட் கிராசிங் பகுதிகளில் 3 விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. 2022-23 முதல் 2024-25 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில், ரயில்வே கிராசிங் விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ரயில்வே நிர்வாகம் மொத்தம் ரூ.16 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. கடலூர் ரயில் விபத்து சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 11,096 ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகள் இன்டர்லாக்(Interlock) செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 1,255-ல் தற்போது வரை 1,053 ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகள் இன்டர்லாக் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மேலும் 72 லெவல் கிராசிங்குகளில் இன்டர்லாக் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடலூரில் 92 லெவல் கிராசிங்குகள் உள்ளன, அவற்றில் 11 லெவல் கிராசிங்குகளை சாலை மேம்பாலம் மற்றும் சாலைக்குக் கீழ் செல்லும் பாலங்கள் மூலம் நீக்குவதற்கு அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், தமிழக அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்படாததால், 7 பாலங்களுக்கான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து