எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் போட்டிகள் பிரிஸ்பேன் மற்றும் மேக்கேயில் நடைபெறுகின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இங்கிலாந்துக்கு எதிராக அதிவேக சதம் விளாசி சாதனை படைத்து அசத்திய 14 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணியின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (விக்கெட் கீப்பர்), வைபவ் சூரியவன்ஷி, வேதாந்த் திரிவேதி, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், நமன் புஷ்பக், ஹெனில் சிங், தீபேஷ், கிஷன் குமார், அன்மோல்ஜீத் சிங், கிலன் பட்டேல், உதவ் மோகன், அமன் சௌகான்.
உழைத்தால் வெற்றி: கில்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) துவங்கியது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் மழை பெய்ந்ததால் போட்டி தாமதமானது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் டாஸ் வென்றதும் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். இந்தத் தொடரில் 2-1 இங்கிலாந்து முன்னிலை வகிக்க, இந்தப் போட்டியில் இந்தியா வென்று சமனில் முடிக்க முனைப்பில் இருக்கிறது.
தொடர்ச்சியாக டாஸில் தோற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியதாவது: நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம். நேற்று பிளேயிங் லெவன் குறித்து அதிகமாக சிந்தித்தேன். மேகமூட்டமாக இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமென நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் ரன்கள் குவிக்க நினைக்கிறோம். விளையாடும் எல்லா போட்டிகளையும் வெல்ல நினைக்கிறோம். அருகில் வருகிறோம். இன்னும் 5-10 சதவிகிதம் கூடுதலாக உழைத்தால் வெற்றி பெறுவோம். அதை வீரர்கள் அளிப்பார்கள் என்றார்.
5-வது டெஸ்ட் முக்கியம்: துருவ்
வெளிநாடுகளில் விளையாடுவது எப்போதும் சவலான என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டருமான துருவ் ஜுரெல் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) மதியம் தொடங்குகிறது. இதில் வென்றால் இந்திய அணி தொடரை 2-2 என சமன்செய்ய முடியும். ரிஷப் பந்த் காயம் காரணமாக வெளியேறியதால் துருவ் கீப்பராக செயல்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வெளிநாடுகளில் விளையாடும்போது சவால்களை கடப்பது எப்போதும் சிறப்பான விஷயமாகும். வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும்போது மக்கள் நம்மை பெரிதாக மதிப்பிடுவார்கள். அதனால், நான் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறேன். களத்துக்குச் சென்று என்னை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய யோசனையாக இருக்கிறது. இந்தப் போட்டி முக்கியமானது. அதனால், என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார். துருவ் ஜுரெல் 4 டெஸ்ட் போட்டிகளில் 202 ரன்கள் எடுத்துள்ளார். தமிழக வீரர் என்.ஜெகதீசன் மாற்றுவீரராக அணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கம்பேக் தரும் ஜிம்பாப்வே வீரர்
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட்டில் பிரண்டன் டெய்லர் அணியில் இணையவிருக்கிறார். ஐ.சி.சி.யின் ஊழல் மற்றும் ஊக்கமருந்து தடையின்படி 3.5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். கடந்த 2019-இல் ஸ்பாட்பிக்ஸில் ஈடுபட்ட இவருக்கு 2022-இல் தடைவிதிக்கப்பட்டது.
இதுமட்டுமில்லாமல் போதைப்பொருளை உட்கொண்டதால் இவருக்கு 2019-இல் 15,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 34 டெஸ்ட் போட்டிகளில் 2,320 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டிகளில் 92, 81, 49 ரன்கள் என சிறப்பான ஃபார்மில் இருந்தார். கடினமாக உழைத்து மீண்டும் கம்பேக் அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 205 ஒருநாள் போட்டிகளில் 6,684 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கு முன்னேறியது பாக்.
இங்கிலாந்தில் முன்னாள் வீரர்களுக்கான உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் லீக் ஆட்டத்திலேயே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக ரெய்னா, தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் அறிவித்தனர். இதனால், அந்த போட்டி கைவிடப்பட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கும் நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கும் இடையே நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால், இந்திய அணியின் வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் முடிவை மதித்து போட்டியை கைவிடுவதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், பாகிஸ்தான் அணி விளையாடத் தயாராக இருந்ததால், அவர்கள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
09 Mar 2026சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது.
-
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 5.08 கோடியில் அமைக்கப்பட்ட அகத்தியர் நகர் விளையாட்டு திடல்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Mar 2026சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
09 Mar 2026சென்னை, டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் ராமதாஸ் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பில் மனு தாக்கல்
09 Mar 2026சென்னை, 87 வயதாகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பா.ம.க.வின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை.
-
திருப்புவனமம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது மதுரை நீதிமன்றம்
09 Mar 2026சிவகங்கை, மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
சட்டசபை தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் பா.ஜ.க. மத்திய பார்வையாளர்கள் நியமனம்
09 Mar 2026டெல்லி, மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பா.ஜ.க. தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
-
ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
09 Mar 2026புதுடெல்லி, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய வ
-
3 கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைமையில் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026சென்னை, விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி த,வெ,க, சா
-
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள என்.டி.ஏ. தேர்தல் பிரச்சார கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
09 Mar 2026கொச்சி, கொச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.
-
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
09 Mar 2026தெஹ்ரான், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
-
கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கை: பார்லி.யில் நிர்மலா சீதாராமன் பதில்
09 Mar 2026புதுடெல்லி, கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
மீண்டும் தள்ளிப்போகிறதா? 'ஜனநாயகன்' திரைப்படம் மறு ஆய்வு ஒத்திவைப்பு
09 Mar 2026சென்னை, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மை வெற்றி: பிரதமராக பொறுப்பேற்கிறார் பாலேந்திர ஷா
09 Mar 2026காத்மண்டு, ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான அவதூறு வழக்கு: வருகிற 12-ம் தேதி விசாரணை
09 Mar 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை: இந்திய தூதரக அதிகாரி தகவல்
09 Mar 2026ரியாத், ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை
09 Mar 2026சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
-
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
09 Mar 2026அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
-
கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: அமெரிக்காவில் தென்கொரியா 29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
09 Mar 2026சியோல், தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக


