எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் போட்டிகள் பிரிஸ்பேன் மற்றும் மேக்கேயில் நடைபெறுகின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இங்கிலாந்துக்கு எதிராக அதிவேக சதம் விளாசி சாதனை படைத்து அசத்திய 14 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணியின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய அணி விவரம்: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (விக்கெட் கீப்பர்), வைபவ் சூரியவன்ஷி, வேதாந்த் திரிவேதி, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், நமன் புஷ்பக், ஹெனில் சிங், தீபேஷ், கிஷன் குமார், அன்மோல்ஜீத் சிங், கிலன் பட்டேல், உதவ் மோகன், அமன் சௌகான்.
உழைத்தால் வெற்றி: கில்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) துவங்கியது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சிறிது நேரம் மழை பெய்ந்ததால் போட்டி தாமதமானது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் டாஸ் வென்றதும் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். இந்தத் தொடரில் 2-1 இங்கிலாந்து முன்னிலை வகிக்க, இந்தப் போட்டியில் இந்தியா வென்று சமனில் முடிக்க முனைப்பில் இருக்கிறது.
தொடர்ச்சியாக டாஸில் தோற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேசியதாவது: நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம். நேற்று பிளேயிங் லெவன் குறித்து அதிகமாக சிந்தித்தேன். மேகமூட்டமாக இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்குமென நினைக்கிறேன். முதல் இன்னிங்ஸில் ரன்கள் குவிக்க நினைக்கிறோம். விளையாடும் எல்லா போட்டிகளையும் வெல்ல நினைக்கிறோம். அருகில் வருகிறோம். இன்னும் 5-10 சதவிகிதம் கூடுதலாக உழைத்தால் வெற்றி பெறுவோம். அதை வீரர்கள் அளிப்பார்கள் என்றார்.
5-வது டெஸ்ட் முக்கியம்: துருவ்
வெளிநாடுகளில் விளையாடுவது எப்போதும் சவலான என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டருமான துருவ் ஜுரெல் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) மதியம் தொடங்குகிறது. இதில் வென்றால் இந்திய அணி தொடரை 2-2 என சமன்செய்ய முடியும். ரிஷப் பந்த் காயம் காரணமாக வெளியேறியதால் துருவ் கீப்பராக செயல்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வெளிநாடுகளில் விளையாடும்போது சவால்களை கடப்பது எப்போதும் சிறப்பான விஷயமாகும். வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும்போது மக்கள் நம்மை பெரிதாக மதிப்பிடுவார்கள். அதனால், நான் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறேன். களத்துக்குச் சென்று என்னை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய யோசனையாக இருக்கிறது. இந்தப் போட்டி முக்கியமானது. அதனால், என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார். துருவ் ஜுரெல் 4 டெஸ்ட் போட்டிகளில் 202 ரன்கள் எடுத்துள்ளார். தமிழக வீரர் என்.ஜெகதீசன் மாற்றுவீரராக அணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கம்பேக் தரும் ஜிம்பாப்வே வீரர்
நியூசிலாந்து அணி ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட்டில் பிரண்டன் டெய்லர் அணியில் இணையவிருக்கிறார். ஐ.சி.சி.யின் ஊழல் மற்றும் ஊக்கமருந்து தடையின்படி 3.5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார். கடந்த 2019-இல் ஸ்பாட்பிக்ஸில் ஈடுபட்ட இவருக்கு 2022-இல் தடைவிதிக்கப்பட்டது.
இதுமட்டுமில்லாமல் போதைப்பொருளை உட்கொண்டதால் இவருக்கு 2019-இல் 15,000 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 34 டெஸ்ட் போட்டிகளில் 2,320 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டிகளில் 92, 81, 49 ரன்கள் என சிறப்பான ஃபார்மில் இருந்தார். கடினமாக உழைத்து மீண்டும் கம்பேக் அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 205 ஒருநாள் போட்டிகளில் 6,684 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கு முன்னேறியது பாக்.
இங்கிலாந்தில் முன்னாள் வீரர்களுக்கான உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் லீக் ஆட்டத்திலேயே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக ரெய்னா, தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் அறிவித்தனர். இதனால், அந்த போட்டி கைவிடப்பட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கும் நான்காம் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கும் இடையே நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால், இந்திய அணியின் வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் முடிவை மதித்து போட்டியை கைவிடுவதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், பாகிஸ்தான் அணி விளையாடத் தயாராக இருந்ததால், அவர்கள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 days ago |
-
இரண்டு அடுக்கு டெஸ்ட்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
31 Jul 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும்.
-
கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை
31 Jul 2025புதுடெல்லி: கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை முதல்வரை சந்தித்த ஓ.பி.எஸ். பேட்டி
31 Jul 2025சென்னை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.
-
அதிக ரிஸ்க் எடுத்து விட்டேன்: காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்
31 Jul 2025லண்டன்: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாமல் சென்றது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
31 Jul 2025சென்னை, தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது
31 Jul 2025திருநெல்வேலி: கொலையான கவின் செல்வகணேஷ், கொலை செய்ததாக சரணடைந்த சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணனை போலீசார் கைது செய்தனர்.
-
பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுத்தது ஏன்..? இந்தியா விளக்கம்
31 Jul 2025பர்மிங்காம்: லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் (டபிள்யூ.சி.எல்.) தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது குறித்து இந்திய அணி காரணம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவும் - ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்கள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
31 Jul 2025புதுடில்லி: இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
-
டாஸில் தோற்பது குறித்து கவலை இல்லை: கேப்டன் ஷுப்மன் கில்
31 Jul 2025லண்டன்: நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம் என்று இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: சரிவை சந்தித்த ஜெய்ஸ்வால்
31 Jul 2025துபாய்: ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சரிவை சந்தித்துள்ளார்.
தரவரிசை பட்டியல்...
-
அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மதுரை கோர்ட்டுக்கு மாற்றம்
31 Jul 2025சிவகங்கை: திருப்புவனம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்த அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மதுரை தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.
-
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
31 Jul 2025நெல்லை: 4-வது நாளாக ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
-
தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த திட்டம்: நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
31 Jul 2025சென்னை: “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களை நாளை (ஆகஸ்ட் 2-ம் தேதி) முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரம்: பிரியங்கா தலைமையில் போராட்டம்
31 Jul 2025புதுடெல்லி, கேரள கன்னியாஸ்திரிகள் கைது விவகாரத்தில், பிரியங்கா காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார்.
-
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ்...!
31 Jul 2025சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வரை நேரில் சந்தித்தேன் தே.மு.தி.க. பிரேமலதா பேட்டி
31 Jul 2025சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
-
ஓவல் கடைசி டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்
31 Jul 2025லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கில்
31 Jul 2025லண்டன்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
-
கீவ் நகரம் மீது ரஷ்யா தாக்குதல்: 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் பலி
31 Jul 2025உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரேமலதா, சுதீஷ் சந்திப்பு
31 Jul 2025சென்னை, முதல்வர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ் சந்தித்து நலம் விசாரித்தனர்.
-
நட்புடன் நலம் விசாரிப்பு: பிரேமலதாவுக்கு முதல்வர் நன்றி
31 Jul 2025சென்னை: நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதாவிற்கு நன்றி என எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
யு-19: சூரியவன்ஷிக்கு வாய்ப்பு
31 Jul 2025ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
-
பாக்.கிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் சூழல் வரலாம்: ட்ரம்ப்
31 Jul 2025வாஷிங்டன், ஒருநாள் இந்தியாவுக்குக்கூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்வார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
பறக்கும் ரயில் நிறுவனம் மெட்ரோவுடன் எப்போது இணைக்கப்படும்? கனிமொழி
31 Jul 2025சென்னை: பறக்கும் ரயில் நிறுவனம் குறித்து பாராளுமன்றத்தில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
பிரேசிலுக்கு 50 சதவீத வரி விதிப்பு: அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவு
31 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.