எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் விளையாடியது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 37 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் ஹாசன் நவாஸ் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஹுசைன் டாலட் 31 ரன்களும், அப்துல்லா சஃபீக் 26 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜெடியா பிளேட்ஸ், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி மற்றும் ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மேற்கிந்தியத் தீவுகளுக்கு 35 ஓவர்களில் 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் 33.2 ஓவர்களில் எட்டிப் பிடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
_______________________________________________________________________________________________
சல்மான்கானின் புதிய திட்டம்
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற டென்னிஸ் பந்து டி-10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். ஐபிஎல் தொடர் 2008-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 18 சீசன் நடந்து முடிந்துள்ளது. இதில் மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.அதற்கு அடுத்தப்படியாக கொல்கத்தா 3 முறை கோப்பை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) என்ற டென்னிஸ் பந்து டி-10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது சல்மான் கானிடம் ஐபிஎல் அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளாதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சல்மான் கான் கூறியதாவது:- ஐபிஎல் அணியை வாங்க எனக்கு இப்போது வயதாகிவிட்டது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் அணியை வாங்குவதற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் அதை ஏற்கவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்று பதிலளித்தார்.
_______________________________________________________________________________________________
இளம் வீரருக்கு பி.சி.சி.ஐ. கெடு
8 அணிகள் இடையிலான 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம்பெற உள்ள முன்னணி வீரர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவையும் உடற்தகுதியை நிரூபிக்க பி.சி.சி.ஐ. கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘என்சிஏ- க்கு ஒரு குறுகிய பயணம்’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.
_______________________________________________________________________________________________
ரிக்கி அணியில் 2 இந்தியர்கள்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்து விளங்கிய 5 ஆல் டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்தவர்களில் நவீன கிரிக்கெட்டில் அசத்திய விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகியோர் இடம்பெறவில்லை. அத்துடன் ஒரு ஆஸ்திரேலிய வீரரை கூட அவர் அந்த பட்டியலில் சேர்க்கவில்லை.
ஆனால் அந்த பட்டியலில் 2 இந்திய வீரர்களை அவர் தேர்வு செய்துள்ளார். ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த 5 ஆல் டைம் சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் :- 1. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), 2. சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), 3. ராகுல் டிராவிட் (இந்தியா), 4. ஜோ ரூட் (இங்கிலாந்து), 5. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து). இது தொடர்பாக பாண்டிங் பேசுகையில், “நான் எதிர்கொண்டு விளையாடியதிலேயே பிரையன் லாரா மிகவும் திறன் மிகுந்த பேட்ஸ்மேன். நான் பார்த்ததிலேயே டெக்னிக்கல் அளவில் சச்சின் தெண்டுல்கர் மிகவும் சிறந்தவர். அதே போல ராகுல் டிராவிட். அவர்களுடன் தற்போது நான் ஜோ ரூட்டையும், வில்லியம்சனையும் சேர்ப்பேன்” என்று கூறினார்.
_______________________________________________________________________________________________
பும்ரா மீது கடும் விமர்சனம்
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இப்படி பும்ரா இந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்று பல முன்னாள் வீரர்களும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் வீரர்களுக்கான பணிச்சுமை மேலாண்மை என்பது முட்டாள்தனமானது இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவரும், வீரருமான சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ முக்கியமான போட்டிகளை முன்னணி வீரர்கள் தவற விடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) எப்படி ஏற்றுக்கொள்கிறது என தெரியவில்லை. இந்திய அணியில் கேப்டன், தலைமை பயிற்சியாளரை விட உடல்தகுதி நிபுணர்தான் முக்கியமானவரா? அப்படி என்றால் தேர்வாளர்களின் பணி என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
_______________________________________________________________________________________________
கோலி குறித்து வெங்சர்க்கார்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில் தான் தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால் விராட் கோலியை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி விட்டு ஓய்வு பெறுங்கள் என்று வற்புறுத்தியிருப்பேன் என இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நான் இந்திய தேர்வு குழு தலைவராக இருந்திருந்தால், இங்கிலாந்து தொடரில் விளையாடிய பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற விராட்டை வற்புறுத்தியிருப்பேன். ஏனெனில் இந்த தொடரில் அவரது தரமும் அனுபவமும் நமக்கு தேவைப்பட்டது ”என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-08-2025.
11 Aug 2025 -
ரீ ரிலீஸ் ஆகும் கேப்டன் பிரபாகரன்
11 Aug 2025விஜயகாந்தின் 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’.
-
காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்
11 Aug 2025நாயகன் மாஸ் ரவியும், நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். ஒரு நாள் ரவி திடீரென்று காணாமல் போகிறார்.
-
தருண் விஜய் நடிக்கும் குற்றம் புதிது
11 Aug 2025ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், அறிமுக நடிகர் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது.
-
நவம்பர் 1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வு வாரியம் அறிவிப்பு
11 Aug 2025சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமரம் திரைவிமர்சனம்
11 Aug 2025காதலி செய்த துரோகத்தால் காதலையும், காதலர்களையும் வெறுக்கும் நாயகன் ஜெய் ஆகாஷ், ஒரு மாமரத்தை தனது காதல் சின்னமாக பாதுகாத்து வளர்த்து வருகிறார்.
-
சிறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
11 Aug 2025செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உருவாகியுள்ள “சிறை” படத்
-
த.வெ.க. தலைவர் விஜய்யுடன் தூய்மை பணியாளர்கள் சந்திப்பு
11 Aug 2025சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் த.வெ.க. தலைவருடன் விஜயுடன் தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர்.
-
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, ஜெர்மன் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டம்
11 Aug 2025சென்னை, தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
-
தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி எந்நாளும் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
11 Aug 2025திருப்பூர், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது.
-
நாளை நமதே விமர்சனம்
11 Aug 2025சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து தொகுதி பட்டியல் சாதியினருக்கானதாக அறிவிக்கப்படுகிறது.
-
வாக்குத் திருட்டு முறைகேடு விவகாரம்: சுதந்திரமான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
11 Aug 2025சென்னை, ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்றுகள் மோசடியை அம்பலப்படுத்துகின்றன என்றும் தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பா.ஜ.க.
-
இந்தியா சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால் தகர்ப்போம் : பாகிஸ்தான் ராணுவ தளபதி மிரட்டல்
11 Aug 2025வாஷிங்டன், சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம் என்று பாக்கிஸ்தான் ராணுவ தளபதி பேசினார்.
-
அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை ஆக.26-ம் தேதி முதல் துவக்கம்: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
11 Aug 2025சென்னை, அரசு கல்லூரிகளில் எம்.எட். மாணவர்கள் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 Aug 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பூர் மாவட்டத்திற்கு திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
11 Aug 2025உடுமலை, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
11 Aug 2025புதுடெல்லி, நாடு முழுவதும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும், நாடு முழுவதும் இந்த பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்
-
உளுந்தூர்பேட்டை அருகே அதிசயம்: மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி
11 Aug 2025கள்ளக்குறிச்சி, உளுந்தூர் போட்டை அருகே மனித முக தோற்றத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி பொதுமக்கள் பீதி.
-
எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு
11 Aug 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
-
79-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
11 Aug 2025சென்னை, 79வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஒரே விவகாரத்திற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றன: மத்திய அமைச்சர் ரிஜிஜு குற்றச்சாட்டு
11 Aug 2025டெல்லி, ஒரே ஒரு குறிப்பிட்ட விவகாரத்திற்காக மட்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன என்றும், பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு வி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடுமலையில் ரோடு ஷோ
11 Aug 2025உடுமலை, உடுமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். பொதுமக்கள் திரண்டுவந்து உற்சாகமாக அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
-
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக சுப்மன் நியமனம்
11 Aug 2025மும்பை : 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக சுப்மன் கில்லை நியமிக்க பி.சி.சி.ஐ.
-
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா கைது
11 Aug 2025புதுடெல்லி, தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி, இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது ஒரு ஜனநாயக படுகொலை : உத்தவ் தாக்கரே கண்டனம்
11 Aug 2025டெல்லி : எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதால் ஜனநாயகத்தின் படுகொலையை உலகம் கண்டுள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.