எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதில் பி.சி.சி.ஐ.-யின் புதிய தலைவர் மற்றும் அடுத்த ஐ.பி.எல். சேர்மன் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் பதவியில் இருந்து விலகினார். அவர், கடந்த 2022-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பி.சி.சி.ஐ. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எந்தவொரு அதிகாரியும் 70 வயதுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. ஐ.பி.எல். சேர்மனாக இருந்து வரும் அருண் துமால் பி.சி.சி.ஐ.-யில் 6 வருடங்கள் பதவி காலத்தை நிறைவு செய்துள்ளதால் அவரும் விலக வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். இதனால் 28-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் புதிய ஐ.பி.எல். சேர்மன் அறிவிப்பும் வெளியாகக்கூடும்.
____________________________________________________________________________________
இந்தியா-ஜப்பான் ஆட்டம் டிரா
11-வது மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழையும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இருந்தது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் உடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜப்பான் அணியில் ஹிரோகா முரயமா மற்றும் புஜிபயாஷி ஆகியோர் தலா ஒரு கோலும், இந்திய அணியில் ருதுஜா மற்றும் நவ்னீத் கவுர் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.
____________________________________________________________________________________
இந்திய வீராங்கனை ஜரீன் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூர் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் 51 கிலோ எடைபிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜெனீபர் லோசானோவை தோற்கடித்தார். இதில் நடந்த மற்ற ஆட்டங்களில் மகளிருக்கான 75 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், ஆண்களுக்கான 70 கிலோ எடைபிரிவில் ஹிதேஷ் குலியாவும் தோல்வியை தழுவினர்.
____________________________________________________________________________________
போர்ச்சுகல் அணி அபார வெற்றி
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகலின் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது. 40 வயதிலும் ரொனால்டோவின் அசத்தலான கோல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அர்மீனியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஜாவோ பெலிக்ஸ் 10, 61ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ரொனால்டோ 21,46-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
ஜாவோ கன்செலோ 32-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார். இந்தப் போட்டியில் 72 சதவிகித பந்தினை போர்ச்சுகல் அணி தன் கட்டுக்குள் வைத்திருந்தது. குரூப் எஃப் அணிகளில் முதல் அணியாக போர்ச்சுகல் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ரொனாடோ மொத்தமாக 942 கோல்களும் சர்வதேச போட்டிகளில் 140 கோல்களையும் நிறைவு செய்துள்ளார். கார் விபத்தில் மறைந்த தியாகோ ஜோடாவிற்கு போர்ச்சுகல் அணியினரும் ரசிகர்களும் மரியாதை செலுத்தினார்கள். கோல் அடுத்து சில வீரர்கள் ஜோடாவின் பாணியில் கொண்டாடிதும் சமூக வலைதளத்தில் வைரலானது.
____________________________________________________________________________________
இலங்கை வீழ்த்திய ஜிம்பாப்வே..!
ஜிம்பாப்வேவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி ஹராரேவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தங்களது ஆகக்குறைந்த டி20 ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளில் இலங்கையை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ரஜா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அது ஏன் என்று பிட்சைப் பார்க்கும் போதுதான் தெரியவந்தது. இலங்கை அணி 80 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வேவும் சமீராவின் வேகத்துக்குத் திக்குமுக்காடினாலும் ரியான் பர்ல் மற்றும் தஷிங்க முஷேகிவாவின் பங்களிப்பின் மூலம் 14.2 ஓவர்களில் 84/5 என்று வெற்றி பெற்றது.
பவர் ப்ளேயில் ஜிம்பாப்வே பவுலர் முசரபானி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இலங்கை 37/4 என்று சரிந்தது. சரித் அசலங்கா 18 ரன்களையும் தசுன் சனகா 15 ரன்களையும் எடுக்க ஒருவழியாக 75 ரன்களைக் கடந்து 17.4 ஓவர்களில் 80 ரன்களுக்குச் சுருண்டது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 2 விக்கெட்டுகளையும் இவான்ஸ் 3 விக்கெட்டுகளையும் கேப்டன் சிகந்தர் ரஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிகந்தர் ரஜா தன் 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்கவில்லை. அபாய வீரர் கமிந்து மெண்டிசை 4வது பந்தில் டக் அவுட் ஆக்கினார் ரஜா. தன் 3வது ஓவரில் கேப்டன் சரித் அசலங்கா மற்றும் சமீராவை வீழ்த்தி 4 ஓவர்களில் 11/3 என்று ரஜா ஆட்ட நாயகன் விருதுக்குரியவரானார்.
____________________________________________________________________________________
தென் ஆப்பிரிக்க வீரருக்கு அனுமதி
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார். இருப்பினும் அறிமுக போட்டியிலேயே அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்தனர். கிரிக்கெட் விதிப்படி, பந்துவீசும்போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து 31 வயதான சுப்ராயன் கடந்த மாதம் 26-ம் தேதி அன்று பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்தினார். சோதனை முடிவில் அவர் விதிமுறைக்குட்பட்டு பந்துவீசுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அனுமதி வழங்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல நகரங்களில் பார்வையிட்ட மக்கள்
07 Sep 2025சென்னை : இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று நிகழ்ந்த முழு சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-09-2025.
07 Sep 2025 -
த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியீடு
07 Sep 2025சென்னை : திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள த.வெ.க.
-
இன்று சென்னை திரும்புகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Sep 2025சென்னை : வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்று, திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறாா்.
-
தமிழகத்தில் 4 இடங்களில் பா.ஜ.க. பிரமாண்ட மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
07 Sep 2025மதுரை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
-
சந்திர கிரகணம் எதிரொலி: திருச்செந்தூர் கோவிலில் நடை அடைப்பு
07 Sep 2025தூத்துக்குடி : சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
-
ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த செங்கோட்டையன்
07 Sep 2025சென்னை : அ.தி.மு.க.
-
செப்.9 முதல் அக்.19 வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
07 Sep 2025தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, செப்.9-ம் தேதி முதல் அக்.19-ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
-
விடுமுறை தினம்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
07 Sep 2025தென்காசி : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும்.
-
மேலவையில் பின்னடைவு: பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
07 Sep 2025டோக்கியோ : ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் பின்னடைவு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலகினார்.
-
பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்த புதிய தகவல் வெளியீடு
07 Sep 2025புதுடெல்லி : இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பா.ஜ.க. வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
-
மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் நாளை பஞ்சாப் பயணம்
07 Sep 2025புதுடெல்லி : பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்.
-
முல்லை பெரியாறு அணையை தந்த பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
07 Sep 2025சென்னை : முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையைத் தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் குடும்பத்தினருடனான சந்திப்பு குறி
-
பாக். கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி
07 Sep 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்.
-
போக்குவரத்து விதிமீறல்: அபராதம் செலுத்திய சித்தராமையா
07 Sep 2025பெங்களூரு : காரில் பயணித்த போது கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா 6 முறை சீட் பெல்ட் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர் அபராதம் செலுத்தினார். 
-
குறளிசைக்காவியம் படைத்த லிடியன் நாதஸ்வரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
07 Sep 2025சென்னை : திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரனுக்கு பாராட்டுகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை
07 Sep 2025கவுகாத்தி : அசாமில் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல்: உக்ரைன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா-3 பேர் உயிரிழப்பு
07 Sep 2025கீவ் : உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது.
-
விடுமுறை தினம் எதிரொலி: திருச்செந்தூரில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
07 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினம் காரணமாக நேற்று திருச்செந்தூரில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா? - விஜயபிரபாகரன் விளக்கம்
07 Sep 2025சென்னை : த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் அறிவிப்போம் என்று தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
செங்கோட்டையனுக்கு ஆதரவு: சத்தியபாமாவை கட்சி பதவியில் இருந்து நீக்கி இ.பி.எஸ். நடவடிக்கை
07 Sep 2025சென்னை : செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சி பதவியையும் பறித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
-
செங்கடலில் கேபிள் துண்டிப்பு:ஆசியாவில் இணைய சேவை பாதிப்பு
07 Sep 2025நியூயார்க் : செங்கடலில் கேபிள் துண்டிக்கப்பட்டதால் இந்தியா உள்பட ஆசியாவில் இணைய சேவை பாதிக்கப்பட்டது.
-
அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பும் எனக்கு கொடுக்கப்படவில்லை : முன்னாள் எம்.பி. நடிகர் ராமராஜன் பேட்டி
07 Sep 2025ஶ்ரீவில்லிபுத்தூர் : முன்னாள் எம்.பி.யான எனக்கு அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லை.
-
ஜார்க்கண்டில் தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
07 Sep 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
கடந்த 2 மாதங்களாக பெய்த மழைக்கு இமாசல பிரதேசத்தில் பலி : எண்ணிக்கை 366 ஆக உயர்வு
07 Sep 2025சிம்லா : இமாசல பிரதேசம் மாநிலத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. மேலும்ரூ.4,079 கோடி மதிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது