எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, அழகர்கோவில் இரணியன்கோட்டைக்குள் வாகனங்கள் செல்ல மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளரிப்பட்டியை சேர்ந்த பிரபு, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கணாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் ஆகியோர், மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், மதுரை அழகர்கோவிலின் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். தற்போது நடக்கும் கட்டிட பணிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை அழகர்கோவிலில் உள்ள இரணியன் கோட்டை பகுதி 13.43 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதற்கு வெளியே உள்ள அழகாபுரிக்கோட்டை பகுதி 79.35 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது அழகாபுரி கோட்டை பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதி கோவிலில் இருந்து 85 மீட்டர் தூரத்தில் உள்ளது.
இங்கு கட்டிடங்கள் கட்டப்படுவதால் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதற்கு தடையில்லா சான்றிதழ் தேவையில்லை. சுற்றுச்சூழலுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது. கோவிலின் வைப்பு நிதி ரூ.85 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக குறைந்துள்ளது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த தகவல் உண்மை இல்லை. அழகர்கோவில் வங்கி கணக்கில் ரூ.53.08 கோடி வைப்பு நிதி உள்ளது. வணிகநோக்கில் பணிகள் நடக்கவில்லை என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து அழகர்கோவில் வளாகத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் (தடை விதித்து) என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கோவில் கோட்டைகளுக்கு உள்பட்ட பகுதிகளின் புகைப்படங்களை பார்த்தோம். இதில் இரணியன் கோட்டைக்குள் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இது கோவிலின் பாரம்பரிய பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இரணியன் கோட்டை பகுதிக்குள் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. ஆனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள், நோயாளிகள், பலவீனமானவர்கள் தரிசனத்துக்கு செல்ல கோவில் நிர்வாகம் உரிய வாகன வசதியை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு, அடுத்த விசாரணையின்போது இங்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல நந்தனார் மண்டபத்திற்கு அருகில் உள்ள அனுமதிக்க முடியாத சில கட்டிடங்களை அகற்ற வேண்டும். அதேபோல கொட்டகைகள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளையும் அகற்றுங்கள்.
அதுமட்டுமல்லாமல் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் ஒப்பந்த அறிவிப்பு குறித்த ஆவணங்களையும், கோவில் கணக்கு வழக்குகளையும், அழகர்கோவில் உரிமைகள் தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு ஆகியவற்றையும், செலவு செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன ஓவியம்
20 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஓவியம் ஏலம் போனது.
-
மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
20 Nov 2025ராமநாதபுரம்: மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்துள்ளது.
-
நியூயார்க் மேயரை இன்று சந்திக்கிறோர் ட்ரம்ப்
20 Nov 2025நியூயார்க்: நியூயார்க் மேயர் மம்தானியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார்.
-
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
20 Nov 2025டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வாய்ப்பு
20 Nov 2025மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சபரிமலைக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை: வரும் 24-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு
20 Nov 2025கேரளா: சபரிமலைக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகையை அடுத்து வரும் 24-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
இந்திய வீரர்களுக்கு வரவேற்பு
20 Nov 2025இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது.
-
வரலாற்றில் முதல்முறை: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இரு பூர்வகுடி வீரர்களுக்கு இடம்
20 Nov 2025மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் இரு பூர்வக்குடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
350 சதவீதம் வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா - பாக். போரை நிறுத்தினேன் : அதிபர் ட்ரம்ப் 60-வது முறையாக பேச்சு
20 Nov 2025வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.
-
ஒரு ரூபாய் நாணயத்துடன் வைரலாகும் பிரதமர் நரேந்திர மோடியின் க்கடிகாரம்
20 Nov 2025கோவை: ஒரு ரூபாய் நாணயத்துடன் பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் வைரலாகிறது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் - 28 பேர் பலி
20 Nov 2025டெல்லி: போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாண்ட்யா, பும்ராவுக்கு இடமில்லை
20 Nov 2025மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாண்ட்யா, பும்ராவுக்கு இடமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
-
ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது போட்டி அட்டவணை வெளியீடு
20 Nov 2025துபாய்: ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-11-2025.
21 Nov 2025 -
துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி உயிரிழப்பு
21 Nov 2025துபாய் : துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெ
-
அரசியல் கட்சி பொதுக்கூட்டம், ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்விற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு
21 Nov 2025சென்னை : அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்ன
-
போலீஸ் அனுமதி மறுப்பு எதிரொலி: விஜய் பொதுக்கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்த த.வெ.க. முடிவு
21 Nov 2025சேலம், விஜய் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேறு ஒரு நாளில் பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
21 Nov 2025சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக அவ
-
ரூ.89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
21 Nov 2025சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.11.2025) சென்னை ஹாரிங்டன் சாலை வேம்புலி அம்மன் திட்டப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும
-
கோவை சர்வதேச திரைப்பட விழா: 81 நாடுகளின் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன
21 Nov 2025சென்னை, வருகிற 28-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட கோவாவில் தொடங்கியது. இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
-
கடற்படை ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக உ.பி.யை சேர்ந்த இருவர் கைது
21 Nov 2025பெங்களூரு : கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உ.பி.யை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயரால் தமிழக வாக்காளர்கள் மத்தியில் குழப்பம்
21 Nov 2025சென்னை : மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும் வரும் தேர்தலில் 3 டி.வி.கே.
-
பாக்.கில் தலிபான் பயங்கரவாதிகள் 23 பேர் சுட்டுக்கொலை
21 Nov 2025இஸ்லாமாபாத், 23 தலிபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுகொன்றது.
-
கா்நாடக அரசியலில் திடீர் குழப்பம்: துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி
21 Nov 2025பெங்களூரு : முதல்வர் சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2.5 ஆண்டுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் துணை முதல்வ
-
மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூர், திருவாரூரில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம்
21 Nov 2025சென்னை : மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


