முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

திசைகாட்டி பலகைகள் மறையும் காலம் வெகு தொலைவில் இல்லை

Image Unavailable

முன்பு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், வாயில் இருக்கு வழி என்ற பழமொழிக்கு ஏற்ப கேட்டுகேட்டுதான் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் திசை காட்டி பலகைகள் வந்தன. அவையும் கால போக்கில் டிஜிட்டல் போர்டுகளாக மாறினவே ஒழிய பலகைகள் இருந்து கொண்டுதான் இருந்தன. கணணி உலகம் அதையும் மாற்றி ஜிபிஎஸ் கருவியை அறிமுகம் செய்தது. இருந்தாலும் ஜிபிஎஸ் கருவியில் நாம் பார்க்கும் படத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தன. தற்போது அதையும் களையும் வகையில் புதிய ஆக்மென்ட் ரியாலிட்டி தொழில் நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.  அதென்ன ஆக்மென்ட் ரியாலிட்டி... வெர்ச்சுவல் ரியாலிட்டியில் செயற்கையான உலகை நிஜம் போல பார்ப்போம்.  ஆனால் ஆக்மென்ட் ரியாலிட்டியில் நிஜ உலகின் மீது டிஜிட்டல் இமெஜ்கள் பரவி இருக்கும். இதன் மூலம் இடத்தின் பெயர், செல்லும் பாதை, செல்ல வேண்டிய திசை, அடைய வேண்டிய முகவரியின் தொலைவு அனைத்தும் நிஜ காட்சிகள் மீது பரவியிருக்கும். இதற்கான சோதனை ஓட்டம் இப்போதே அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்