எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும்: நடிகை ராய் லட்சுமி
கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும்: நடிகை ராய் லட்சுமி
நடிப்பு, எங்களுக்கு தொழில். கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும் என்று நடிகை ராய் லட்சுமி கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி பட உலகிலும் பிரபலமாக இருப்பவர், நடிகை ராய் லட்சுமி. இவர் முதன்முதலாக, ‘ஜூலி-2’ என்ற இந்தி படத்தில், கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, ராய் லட்சுமி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“ஜூலி-2 படத்தில், நான் படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு தகவல் பரவியிருக்கிறது. ‘டிரைலரை’ பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்ல தோன்றும். ஆனால், முழு படத்தையும் பார்ப்பவர்களுக்கு என் கதாபாத்திரம் மீது அனுதாபம் வரும். படத்தின் கதைப்படி, எனக்கு அப்பா கிடையாது. அம்மா 2-வது திருமணம் செய்து கொள்வார். என் வளர்ப்பு தந்தை என்னை “வெளியே போய் சம்பாதித்து வா” என்று விரட்டி விடுகிறார். நான் போராடி, சினிமா நடிகை ஆகிவிடுவேன். இது, ‘ஜூலி-2’ படத்தின் கதை.சினிமாவில், சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என்று சில நடிகைகள் துணிச்சலுடன் சொல்லி வருகிறார்கள். அதுபோன்ற அனுபவம் எனக்கு நேரடியாக ஏற்படவில்லை.
‘கற்க கசடற’ என்ற தமிழ் படத்தில், டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் என்னை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அந்த படம் வெளியான பின், எனக்கு புதிய பட வாய்ப்புகளே வரவில்லை. 4 வருடங்களாக போராடினேன்.அப்போது எனக்கு மறைமுகமாக அந்த அனுபவம் ஏற்பட்டது. அனுசரித்து போகும்படி கூறினார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. சம்மதித்து இருந்தால், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆகியிருப்பேன். அந்த சமயத்தில், எனக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாது. என்னைப் பற்றி அடுத்தடுத்து வதந்திகளை பரப்பினார்கள். அந்த வதந்திகளுக்கு பின்னால் யாரோ இருந்தார்கள்.என் வாழ்க்கையில், நான் 5 முறை காதல்வசப்பட்டு இருக்கிறேன். என் காதலர்களின் பெயர்களை சொல்ல முடியாது. அந்த 5 காதல்களும் தோல்வியில் முடிந்து விட்டன. ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போது, என் அறை கதவை பூட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து அழுது இருக்கிறேன்.ஆண்களில், நிறைய நல்லவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.
ஆர்யா என் நெருங்கிய நண்பர். எங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்து வருகிறது. வெறும் நட்பு மட்டும்தான். அந்த நட்பை பயன்படுத்தி நான் அவரிடம் பட வாய்ப்பு கேட்பதில்லை.பெண்களுக்கு ஆண்கள் ‘செக்ஸ்’ தொல்லை கொடுப்பது போல், ஆண்களுக்கும் சில பெண்கள் ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதை நான் அறிந்து வைத்து இருக்கிறேன்.எனக்கு அரசியல் தெரியாது. அதனால் அரசியலுக்கு வர மாட்டேன். ‘பத்மாவதி’ படத்தில் நடித்ததற்காக தீபிகா படுகோனேயின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்து இருப்பதை கண்டிக்கிறேன். நடிப்பு, எங்களுக்கு தொழில். கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும்.” இவ்வாறு நடிகை ராய் லட்சுமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்: வரும் 4-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை
28 Apr 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்தோடு கொடைக்கானல் செல்கிறார்.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
உதகையில் 126-வது மலர் கண்காட்சி: மே 10-ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது
28 Apr 2024ஊட்டி, உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே மாதம் 10-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு மே 1 வரை கெடு
28 Apr 2024சென்னை, தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
ஜடேஜாவுக்கு பிளெமிங் புகழாரம்
28 Apr 202410 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்து: கேரளாவை சேர்ந்தவர் கைது
28 Apr 2024திருவனந்தபுரம், 'தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்' என பேஸ்புக்கில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழகத்தில் கோடைமழை குறைவாக பொழியும்: இந்திய வானிலை மையம் தகவல்
28 Apr 2024புதுடில்லி, இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை மழை குறைவாகவே பொழியும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சி.எஸ்.கே - பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது
28 Apr 2024சென்னை, சி.எஸ்.கே. - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (ஏப்.29-ல்) தொடங்க உள்ளது.
-
பேருந்து மீது லாரி மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
28 Apr 2024லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.