எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.13 - சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.டி.ஐ. குரூப்-1 தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் நேர்த்தியாக பேச ஆரம்ப பள்ளியிலேயே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் புரட்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மொத்தம் 284 இயங்கி வருகின்றன. இவற்றில் பயின்றுவரும் பெரும்பான்மையான மாணவர்கள் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்தம் வாழ்வில் ஒளி விளக்கினை ஏற்றி அவர்தம் பெற்றோரின் வயிற்றில் பாலை வார்த்திடும் நோக்கோடு 2012 -2013 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படவுள்ளன.
பள்ளிகள் தோறும் வளர்ச்சிப் பணித்திட்டம்.
குறிப்பு: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 122 தொடக்கப் பள்ளிகள் என 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதுவரை ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் பள்ளி வளர்ச்சி திட்டங்கள் மூலம் பள்ளிகளின் குறைந்த பட்சத் தேவைகள் மற்றும் அவசரத் தேவைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு வந்தன. இதனால் காலத்திற்கு உகந்த ஆக்கப்nullர்வமான பார்வையை, பள்ளிக்குத் தேவையான குறிப்பிட்ட வளர்ச்சியை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. ஒவ்வொரு குழந்தையின் அனைத்து ஆற்றல்களையும் வெளிக்கொணர்ந்திடும் வகையில் பள்ளியின் பார்வையும், அணுகுமுறையும் அமைவது அவசியமாகிறது.
சென்னை மாநகராட்சியின் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேனிலைப் பள்ளிகள் வரையிலான அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி தோறும் வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். ஆரம்பநிலையில் பள்ளி அளவில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பள்ளி தோறும் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒருங்கிணைந்த கவனிப்பு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்திட ஏதுவாக அனைத்துப் பள்ளிகளுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் வருங்காலத்தில் மைய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு (ஐ.ஏ.எஸ்.மற்றும் ஐ.பி.எஸ்.), மற்றும் அகில இந்திய பொறியியல், மருத்துவம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணியியல் (குரூப்-1) பணிகளுக்கான தேர்வு மற்றும் அகில இந்திய / மாநில அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளை ஆர்வத்துடன் எழுதிடும் வகையில் அதற்கான அடிப்படைப் பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது.
மாணவர்கள் பள்ளியில் பயிலும் காலங்களிலேயே வருங்காலத்தில் பயில வேண்டிய பாடம் பற்றியும், பெற விரும்பும் வேலை வாய்ப்புப் பற்றியும் விவரிக்கக் கூடிய வழிகாட்டுக் கல்வியையும் அதற்கான சிந்தனைகளையும் பெற வேண்டியுள்ளது. அத்தகைய அறிவுதான் அவர்கள் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளை எழுதிடவும் (அகில இந்திய பொறியியல், மருத்துவம், ஐ.ஐ.கூ. போன்றன) மற்றும் மைய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணியியல் (ழுசடிரயீ1) பணிகளுக்கான தேர்வு மற்றும் அகில இந்திய / மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் எழுதிடவும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும், சரியான பரிந்துரையையும் அளிக்கும்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை நன்கு அறிந்திட அவர்களுக்கு சிறப்பு அடிப்படை பாடப்பிரிவுகள் தொடங்கப்படும். நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் எழுத ஆர்வமுடைய மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டு மையம் அமைத்தல்.
குறிப்பு: 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் என்பது மிகவும் அவசியமாகும். இதனால் காலத்திற்கு உகந்த கல்வி, வேலை வாய்ப்புகளை அறிந்து மாணவர்கள் படிக்க இயலும்.
அறிவிப்பு: அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு மையம் உருவாக்கப்படும். அதற்குப் பயன்படும் வகையில் நாளிதழ்கள், வார பத்திரிக்கைகள், குறிப்புதவி நூல்கள் மற்றும் என்னென்ன படிப்பு, படிப்பிற்கு ஏற்ப வங்கி மூலம் எவ்வளவு கடன் பெறலாம் என்பது குறித்தான குறிப்புதவி நூல்கள் போதுமான அளவில் வழங்கப்படும். ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி.
குறிப்பு: மாணவர்கள் ஆங்கிலத்தில் நேர்த்தியாகப் பேசிடவும் பிறர் பேசுவதைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் அவர்களுக்குப் போதுமான பயிற்சி தேவைப்படுகிறது. மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையைப் பெற்றால் அவர்கள் தன்னம்பிக்கை வளர்வதுடன் வேலை வாய்ப்பினை பெற ஏதுவாகும்.
அறிவிப்பு: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும் உரையாடவும் ஆங்கிலத்தில் பேசிப்பழகும் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். 9, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னதாக ஆங்கில சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன