எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.25 - பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.7.50 உயர்த்திய மத்திய அரசுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.7.50 அளவிற்கு உயர்த்திய மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ந.சேதுராமன்:-
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் ந.சேதுராமன் விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றத்தை அறிவித்துள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த மோசமான நடவடிக்கைக்கு மத்திய அரசே காரணம். பெட்ரோலிய துறையில் நடமாடிக் கொண்டிருக்கிற ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால் பல்வேறு உண்மைகள் வெளிப்படும் என்று கூறியுள்ளார்.
வைகோ:-
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணம் காட்டி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகள் தான் பணவீக்கத்துக்கும், ரூபாய் மதிப்பு சரிவதற்கும் காரணம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகள்தான், பணவீக்கத்துக்கும், ரூபாய் மதிப்பு சரிவதற்கும் காரணம் ஆகும்.
பெட்ரோல் விற்பனை மூலம் எண்ணெய் நிறுவனங்கள் மார்ச் மாதம் வரை 4,860 கோடி ரூபாய் நட்டம் அடைந்து உள்ளது என பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்து உள்ளார். 20112012 ஆம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஈட்டுத் தொகையாக 38,500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருக்கின்ற நிலையில், இப்போது பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு கூறும் காரணம் ஏற்கத்தக்கது அல்ல.
கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. நாட்டின் பண வீக்கம் 7.23 சதவிகிதமாகவும், உணவு பணவீக்கம் 10.49 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால், விலைவாசி கடுமையாக உயரும். அது அடித்தட்டு மக்களுக்குப் பெரும் சுமையாக விழும் என்பதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.
இதற்கு மத்திய அரசு பொறுப்பு அல்ல என்றும், எண்ணெய் நிறுவனங்கள்தான் இதற்குப் பொறுப்பு என்றும் நாட்டு மக்கள் அனைவரும் ஏதும் அறியாதவர்கள் என்று கருதிக்கொண்டு, ஏமாளிகள் ஆக்க, இந்த அரசை நடத்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா? கொள்ளையடிக்கும் எண்ணெய் நிறுவனங்களா? என்று கேள்வி எழுகிறது. இந்த விலை உயர்வினால், மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் நடுத்தர மக்கள், ஆட்டோ ஓட்டும் அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மொத்த விலை உயர்வு நடுத்தர மக்களையும், அடித்தட்டு மக்களையும் வாட்டி வதைக்கும்.
மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன், பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று வைகே கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜயகாந்த்:-
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், மத்திய அரசு பதவி ஏற்று மூன்று ஆண்டு காலத்தில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதன் காரணமாக சுமார் 44 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை, இன்று 79 ரூபாய் என்ற அளவில் சுமார் 80 சதவீதம் உயர்ந்து உள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெறுகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கையாலும், எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளித்து விட்டு, எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல் விலையை உயர்த்தியது என்று பொது மக்களின் காதில் null சுற்றுகின்ற மத்திய அரசு, வரலாறு காணாத அளவில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.7.50 என அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு தேமுதிக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ராமதாஸ்:-
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் ஏற்கனவே பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல் விலை இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டு இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல் விலை உயர்வால் பிற பொருட்களின் விலையும் சங்கிலி தொடர் போல அதிகரிக்கும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 12 hours ago |
ஆனியன்ப்ரை5 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.