முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்கு 3 கப்பல்களில் நேற்று டீசல் வந்தது

புதன்கிழமை, 30 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.30 - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக டீசல் சப்ளை கடுமையாக பாதித்தது. இதனால் பெரும் பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. இந்த திடீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் வாகன போக்குவரத்து பாதித்துள்ளது. தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக டீசல் இறக்குமதி செய்ய எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்தது.

அதன்படி 67 ஆயிரம் மெட்ரிக்டன் டீசல் 3 கப்பல்களில் கொண்டு வரப்பட்டது.

கொச்சியில் இருந்து 20 மெட்ரிக்டன் டீசல் ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் நேற்று அதிகாலையில் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.

2 -வது கப்பல் 12 மணி அளவிலும், 3 -வது கப்பல் 2 மணி அளவிலும் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. உடனடியாக பைப்லைன் மூலம் சேமிப்பு கிடங்குகளில் இறக்கப்பட்டது.

இதுபற்றி எண்ணை நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னையின் டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க 67 ஆயிரம் மெட்ரிக்டன் டீசல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக டீசல் சப்ளை தொடங்கி எனவே தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு நேற்று இரவு முதல் படிப்படியாக குறைந்து. இன்று நிலமை சீராகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்