எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.13 - தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. மிகவும் பதட்டமான 26 தொகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம் முறைகேடுகளை தடுக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. தேர்தல் களத்தில் 234 தொகுதிகளிலும் 2773 வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த 3 வாரங்களாக தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ஆகியோர் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தனர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், பா.ஜ.க.தலைவர்கள் அத்வானி, நிதின்கட்காரி, சுஷ்மாசுவராஜ், அருண் ஜேட்லி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ்காரத், பிருந்தா காரத், டி.ராஜா, ஏ.பி.பரதன் ஆகியோர் தமிழகம் வந்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார்கள். நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டு போடலாம். வாக்காளர்கள் பயமின்றி சுதந்திரமாக வந்து வாக்களிக்க பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் 100 சதவீதம் கச்சிதமாக செய்து முடித்து விட்டது. வாக்கு சாவடிகளுக்கு தேவையான மின்னணு எந்திரம், அடையாள மை, மற்றும் எழுது பொருட்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகளை தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டார்.
சென்னை நகரில் நடைபெறும் தேர்தல் குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் 3236 பூத்துகள் உள்ளன. 266 மண்டலங்களாக இவைகள் பிரிக்கப்படும். 1 மண்டலத்திற்கு 1 அதிகாரி பொறுப்பாக இருப்பார். வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் அனுப்பப்பட்டு விட்டன. இரவு பகலாக அதிகாரிகள் டூட்டியில் இருப்பார்கள். வாக்குப் பதிவு முடிந்து இரவு மின்னணு எந்திரங்களை அனுப்பும் வரை டூட்டியில் இருப்பார்கள் என்றார்.
வாக்குசாவடிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்று இரவுக்குள் போய் சேர்ந்து விடும். எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. 1100 வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகிறது. மத்திய அரசு அதிகாரிகள் 500 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு செல்போன் வழங்கப்பட்டுள்ளது. அந்த போனில்தான் அவர்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று மாலை தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இன்று ஓட்டுப்பதிவுக்கு தேவையான இதர பொருட்களை பெற்றுக் கொண்டு, இன்றே ஓட்டுச்சாவடிக்கு சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார்கள். தமிழகம் முழுவதும் மொத்தம் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வெப்காமிரா மூலம் படம் பிடித்து இணையத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். மேலும் 10 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப் பதிவு முழுமையாக படம் பிடிக்கப்படும். இவை தவிர சுமார் 13 ஆயிரம் தேர்தல் பார்வையாளர்கள் ரோந்து சுற்றி வந்து ஓட்டுப்பதிவை கண்காணிப்பார்கள். பெரும்பாலான ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாநில போலீசாருடன் சுமார் 25 ஆயிரம் துணை நிலை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். முக்கிய தொகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்களில் வரதடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் நபர்களால் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருக்க நேற்றிரவு முதல் திருமண மண்டபங்கள், விடுதிகள், சமூக நலக் கூடங்களில் சோதனை நடந்து வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் இன்று வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை பயன்படுத்தி வாக்காளர்களுக்கு நூதனமான வழிகளில் பணம்பட்டு வாடா செய்யப்பட்டு விடலாம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே இன்று தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கண்காணிப்பு தீவிரமாக இருந்தது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வாரி, வாரி வழங்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. என்றாலும் குறிப்பிட்ட 26 தொகுதிகளில் பணம் பட்டுவாடா மிக, மிக அதிக அளவில் நடப்பதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் கள் வந்துள்ளன. இந்த 26 தொகுதிகளிலும் இன்றிரவு பணபட்டுவாடா தீவிரமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த 26 தொகுதிகளிலும் கூடுதல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆதாரப்nullர்வமாக தகவல்கள் தரும் பட்சத்தில் தேர்தலை ரத்து செய்யவோ, அல்லது தேர்தலை ஒத்தி வைக்கவோ உயர் அதிகாரிகள் முடிவு எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 26 தொகுதிகளும் எவைஎவை என்ற தகவலை தெரிவிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் மறுத்து விட்டனர். சென்னையில் கொளத்தூர் தொகுதி இந்த கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலில் மொத்தம் 4.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 80 லட்சம் பேர் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள். இவர்களில் சுமார் 50 லட்சம் பேர் முதன் முதலாக வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள nullத்சிலிப் இரண்டில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். பெரும்பாலான வாக்காளர்களுக்கு nullத் சிலிப் கொடுக்கப்பட்டு விட்டது. nullத்சிலிப் கிடைக்காதவர்கள் ஓட்டுச்சாவடிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் பணிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் அனைவரும் இன்றே தங்களுக்குரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாளை மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவ டையும். அதன் பிறகு மின் னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்படும். அடுத்த மாதம் (மே) 13ந் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது