முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.8 - தே.மு.தி.க. தலைவர். விஜயகாந்த் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. சொத்துக் குவிப்பு தொடர்பாக விஜயகாந்த் ,முதல்வரை அவதூறாகப் பேசி பேட்டி அளித்துள்ளார் என்று சென்னையில் நேற்று இந்த அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.   

சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மாநகர அரசு வக்கீல் எம்.எல். ஜெகன் முதல்​அமைச்சர் ஜெயலலிதா சார்பில் விஜயகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கேப்டன் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் 14​ந்தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின்போது, சசிகலாவுடன் சேர்ந்து கொண்டு கோடி கோடியாக கொள்ளையடித்ததால் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.

ஊழல் தடுப்பு சட்டம் கடுமையாக இருப்பதால் ஜெயலலிதா ஜெயிலுக்கு போவது உறுதி என்று அ.தி.மு.க.வினர் பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சானது அடிப்படை ஆதாரமற்றது, அவதூறானது. அவர் உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்.

இதனால், தமிழக அரசுக்கும், முதல்​ அமைச்சரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக அவர் பேட்டி அளித்து உள்ளார். இவ்வாறு பேட்டி அளித்த விஜயகாந்த்தை கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்