முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்கீரன் கோபால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு

புதன்கிழமை, 19 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.19 - நக்கீரன் கோபால் மீது மேலும் ஒரு அவதூறு  வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. நக்கீரன் பத்திரிக்கையில் அ.தி.மு.க.வை கலக்கும் நிழல் முதல்வர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது முதல்​அமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி சார்பில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் சென்னை செசன்சு கோர்ட்டில் மேலும் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-​

கடந்த 5-​ந் தேதி வெளியான நக்கீரன் பத்திரிக்கையில் அ.தி.மு.க.வை கலக்கும் நிழல் முதல்வர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி தமிழக அரசுக்கும், என்னுடைய பணிக்கும் களங்கம் ஏற்படும் வகையில் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் உண்மை தன்மை கிடையாது. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அச்செய்தி அமைந்துள்ளது. இந்த செய்தி வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகிய 2 பேரையும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்