முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் நன்மைக்காக 343 புதிய அறிவிப்புகள்: முதல்வர்

வியாழக்கிழமை, 20 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 19​  - தமிழக வரலாற்றில் முதன் முறையாக தமிழக மக்களின் நன்மைக்காக 343 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.  கடந்த 3 நாட்களாக கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. நேற்று நிறைவு நாள் அன்று புதிதாக 343 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். 

கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் நடத்தப்பட்ட இக்கூட்டம் வெற்றிகரமாக நடந்தது. இக்கூட்டம் 3 நாட்கள் நடத்தப்பட்டன. வருடம் ஒருமுறை நடத்தப்படும் இம்மாநாடு இதுவரை 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. முதன் முறையாக இந்த மாநாடு 3 நாட்கள் நடத்தப்பட்டது. 

முதல் நாளில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களின் கூட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. இரண்டாவது நாளில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டும் கூட்டம் நடத்தப்பட்டது. முன்றாவது நாள் காவல்துறை அலுவலர்களுக்கு மட்டும் கூட்டம் நடத்தப்பட்டது. 

கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக மக்களின் நன்மைக்காக அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய 343 புதிய அறிவிப்புகளை நான் அறிவித்துள்ளேன். இக்கூட்டத்தில் நிகழ்த்திய என்னுடைய உரைகள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்