முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூர் - அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

சனிக்கிழமை, 22 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,டிச.22 - உலக பிரசித்தி பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் ஆவரங்காடு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், புதுக்கோட்டை மாவட்டம் சூரியூர் ஆகிய இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நாகமுத்து ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுக்களை விசாரித்து நீதிபதிகள் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளன. அவற்றை பின்பற்றி இந்த 4 இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்