எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஏப்.17 - சித்திரை திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மதுரை மீனாட்சிக்கு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கல்யாண காட்சியை தரிசித்தனர். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் தினந்தோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது இந்த கோவிலுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலின் திருவிழாக்களில் சித்திரை திருவிழாவும்,திருக்கல்யாணமும் உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த வியாழக்கிழமை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திக் விஜயம் நடைபெற்றது. தினமும் பல்வேறு வாகனங்களில் சாமியும் அம்மனும் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் 10 ம் நாளான நேற்று மாணிக்க மூக்குத்தி மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை 10.30 மணியில் இருந்து 10.59க்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்திற்காக சுந்தரேசுவரரும், ப்ரியாவிடையும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்தனர். முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடினர். அதிகாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர். மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு சுவாமி, ப்ரியாவிடை, மீனாட்சி அம்மன் வந்தனர். இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த முருகப்பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.
குலசேகரபட்டர் வழி சிவச்சாரியார் சுந்தரேசுவரராகவும், உக்கிரபாண்டி பட்டர் வழிச்சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் அணிந்து கல்யாணத்தை நடத்தினர். மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவாச்சாரியார் சுவாமிக்கு பாதபூஜை செய்தார். பின்னர் காப்புகட்டிய கணேஷ்பட்டர் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்தார். பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்யபூஜை போன்றவை நடைபெற்றது. சுவாமி,ப்ரியாவிடை, மீனாட்சிக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. இதன்பிறகு சுவாமியும், அம்பாளும் மூன்று முறை மணவறையை சுற்றி வந்து மாலை மாற்றிக்கொண்டனர். சுவாமி, ப்ரியாவிடைக்கும், மீனாட்சிக்கும் பட்டு வஸ்திரமும், பட்டு சேலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எப்போது மாங்கல்ய நாண் பூட்டு நிகழ்ச்சி நடைபெறும், அந்த கண்கொள்ளா காட்சியை காண்போம் என்ற பேராவலில் இருந்த பக்தர்களின் கண்களுக்கு இனிய நிகழ்வாக, மேளம் தாளங்கள் முழங்க, வேதமந்திரங்கள் விண்ணை பிளக்க 10.55 மணிக்கு மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சியின் கழுத்தில் சுந்தரேசுவர கடவுள் மங்கள நாணை பூட்டினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாயே, மீனாட்சியே காப்பாற்ம்மா என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டனர்.
இதை தொடர்ந்து திருக்கல்யாணத்தை காணவந்த பெண்கள் தங்கல் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்து புதிய மஞ்சள் கயிற்றில் கோர்த்து கழுத்தில் அணிவிந்து கொண்டனர். சில தம்பதியினர் தனது கணவனின் கையில் புதிய திருமாங்கல்யத்தை கொடுத்து அணிவிக்கச்செய்தனர். திருக்கல்யாணம் முடிவடைந்ததும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதன் பிறகு மீனாட்சியும், சுந்தரேசுவரரும் தம்பதியர் சகிதமாக ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். இங்கும் மாலை வரை ஏராளமான பக்தர்கள் வந்து கல்யாண கோலத்தில் இருந்த அன்னையையும், அப்பனையும் தரிசித்து சென்றனர். திருக்கல்யாணத்தையொட்டி கோவிலுக்குள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மேலும் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.
மீனாட்சி திருக்கல்யாணத்தை காண சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்குள் திரண்டனர். ஆடிவீதி முழுவதிலும் பெரிய டிவிக்கள்வைக்கப்பட்டு திருக்கல்யாண காட்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருக்கல்யாணம் முடிந்து நேற்று மாலை அம்மனும், சாமியும் பூப்பல்லக்கில் எழுந்தருளினர். இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. சிறிய தேரில் மீனாட்சியும், பெரிய தேரில் சுந்தரேசுவரும், ப்ரியாவிடையும் எழுந்தருளுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 23 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு
22 Jun 2025மதுரை : மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
22 Jun 2025ஈரோடு : தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிக தொகுதிகள் பெற்று போட்டியிட வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்: அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தரிசனம்
22 Jun 2025ராமேசுவரம் : ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது.
-
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு
22 Jun 2025அமராவதி : ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில், ஒய்.எஸ்.ஆர்.
-
முருகப்பெருமான் தமிழ்நாடு முதல்வர் பக்கம் இருக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி
22 Jun 2025சென்னை : “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
22 Jun 2025திருச்செந்தூர் : ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர்.
-
அமைதி ஏற்படாவிட்டால் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் : அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
22 Jun 2025நியூயார்க் : ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
-
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
22 Jun 2025மதுரை : மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
-
பயிர் நிவாரண நிதியில் ரூ. 40 கோடி மோசடி: 11 அதிகாரிகள் சஸ்பெண்ட்
22 Jun 2025மும்பை : பருவ மழையின் போது சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணத்தில் ரூ. 40 கோடி மோசடி செய்ததாக 11 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
விஜய் பிறந்தநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
22 Jun 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நேற்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் தல
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
22 Jun 2025சென்னை : சகோதரர் விஜய் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு ஒருநாளும் இந்தி திணிப்பை ஏற்காது: ஆ.ராசா
22 Jun 2025சென்ன : தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது என்று ரயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வாசிம் அக்ரமின் வாழ்நாள் சாதனையை தகர்த்த பும்ரா
22 Jun 2025லீட்ஸ் : டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா 'சேனா' நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலா
-
இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்
22 Jun 2025சேலம் : சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
-
இ.பி.எஸ். கார்டூன் விவகாரம்: புதுச்சேரியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
22 Jun 2025புதுச்சேரி : எடப்பாடி பழனிச்சாமி கார்டூன் விவகாரத்தில் தி.மு.க.வைக் கண்டித்து புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று ஈரான் அமைச்சர் ஆலோசனை
22 Jun 2025ஈரான் : இஸ்தான்புல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், இன்று ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன் என்று தெரிவித்தார்
-
ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல்: அதிபர் ட்ரம்புக்கு நெதன்யாகு நன்றி
22 Jun 2025டெல் அவிவ் : ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள
-
பும்ராவுக்கு டக்கெட் புகழாரம்
22 Jun 2025இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட் விக்கெட்டை பும்ரா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
-
99 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஹாரி ப்ரூக்..!
22 Jun 2025லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஹாரி ப்ரூக் 99 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.
-
சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி
22 Jun 2025மியாமி: அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸியின் செயலால் கால்பந்து உலகம் நெகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.
-
ஈரான் மீது திடீர் தாக்குதல்: அமெரிக்காவுக்கு பாக். கண்டனம்
22 Jun 2025லாகூர் : ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி சாதனை: முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதல்வர் பாராட்டு
22 Jun 2025சென்னை : ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுக்கு பதிலடி: ஈரான்
22 Jun 2025டெஹ்ரான் : சுய பாதுகாப்பு சார்ந்து சட்டபூர்வமான பதிலடி மூலம் ஈரானின் இறையாண்மை மற்றும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
-
ஈரான் தாக்குதல் அச்சம் : நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
22 Jun 2025அமெரிக்கா : அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.
-
ஹவாய் தீவில் வெடித்து சிதறிய எரிமலை
22 Jun 2025ஹவாய் தீவு : அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. கிலாவியா எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுவது வழக்கம்.