முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வாலிஸ் கிளப் நடத்தும் வாலிபால் போட்டி

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்

 

சென்னை, பிப்.22 - வாலிஸ் கிளப் நடத்தும் 20வது ஆண்டுக்கான மாநில வாலிபால் போட்டி சென்னையில் நாளை துவங்குகிறது. சென்னையிலுள்ள வாலிஸ் கிளப்,  மாநில அளவிலான வாலிபால் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதன் 20வது ஆண்டுக்கான போட்டிகள் நாளை (23ம் தேதி) துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. ஏர்செல் நிறுவனத்தின் ஆதரவோடு நடத்தப்படும் இப்போட்டிகள் அசோக்நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் மின்னொளியில் நடத்தப்படுகிறது.

ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் கஸ்டம்ஸ், தென்னக ரயில்வே, எஸ்.டி.ஏ.டி., ஐ.ஓ.பி., இந்தியன்வங்கி, ஐ.சி.எப். ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு வசந்த் கோப்பை பரிசளிக்கப்படும்.

பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் செயின்ட் ஜோசப்ஸ்,  சிவந்தி கிளப், வேல்ஸ் அணி, ஜி.கே.ம்.கிளப் ஆகிய 4 அணிகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு வேல்ஸ் கோப்பை பரிசளிக்கப்படும்.

மேற்கண்ட தகவல்களை வாலிஸ் கிளப் செயலாளர் எம்.நிர்மல் குமார் தெரிவித்தார். பேட்டியின்போது கன்வீனர் எம்.பிரபாகரன் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்