முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்கா கட்டிட விபத்தில் பிணமான தம்பதியின் படம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2013      உலகம்
Image Unavailable

 

டாக்கா, மே. 11 - வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கட்டிட விபத்தை விட அந்த விபத்தின் போது உள்ளே சிக்கி பிணமாக மீட்கப்பட்ட ஒரு கணவன், மனைவியின் படம்தான் உலகையே உலுக்கி விட்டது. கட்டடம் இடிந்து விழுந்தபோது மனைவியை விட்டுப் பிரியாமல், அவரைக் கட்டிப் பிடித்தபடி காணப்படுகிறார் அந்த கணவர். இந்தப் படம்தான் அனைவரையும் உலுக்கி விட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல், தப்பித்துப் போக முயலாமல், கட்டிப் பிடித்தபடி பிணமாகியுள்ளனர்.

கடந்த மாதம் டாக்கா அருகே 8 மாடிகளைக் கொண்ட ராணா பிளாசா என்ற கார்மெண்ட் ஆலையின் கட்

டிடம் சரிந்து விழுந்தது. இதில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர். 2000 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த கட்டிட இடிபாடுகள் இன்னும் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அந்த இடிபாடுகளில் ஒரு தம்பதியின் உடல்கள் சிக்கியுள்ளன. அதைப் பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்து போய் விட்டனர். கணவனும், மனைவியும் ஒருவர் பிரியாமல் இறுக்கி அணைத்தபடி காணப்பட்டனர்.

மரணத்தின் கடைசி நொடி வரை இணை பிரியாமல் இருக்க முடிவு செய்து இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்துள்ளனர். இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் கலங்கிப் போய் விட்டனர்.

அந்தத் தம்பதியினரின் உடல்களின் கீழ்ப் பகுதி கீழே புதைந்து விட்டன. மேல் பகுதி மட்டுமே தெரிகிறது. அந்த ஆணின் கண்களில் கண்ணீர் போல ரத்தம் ஓடி உறைந்து போயிருந்தது. இந்தப் புகைப்படத்தை தஸ்லிமா அக்தர் என்பவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்