முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயினில் நிலநடுக்கம் - 10 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      உலகம்
Image Unavailable

 

மான்ரிட்,மே.13 - ஐரோப்பா நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 

ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லோர்கா நகரில் நேற்றுமுன்தினம் இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. பூமிக்குள் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டியிருந்தது. நிலநடுக்கத்தில் லோர்கா நகரமே குலுங்கியது. அடுக்குமாடி கட்டிடங்கள் பல இடிந்து நொறுங்கி விழுந்தன. அதில் 10 பேர் சிக்கி பலியாகிவிட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகள் குறிப்பாக பலமாடி கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளுக்குள்ளே இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு தெருக்களுக்கு ஓடிவந்துவிட்டனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் அதே நகரில் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. ஸ்பெயின் நாட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு நாடு முழுவதும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்