முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் சில்வியோ 2 ஆண்டு அரசியலில் ஈடுபட தடை

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

மிலன், அக்.21   -  வருமான வரிச் சோதனையில் சிக்கிய  இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி அரசியலில் ஈடுபட கோர்ட் 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 

இவர் மைனர் பெண்ணுடன் உறவு %ஏகாண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இவர் செனட்  உறுப்பினராக இருப்பதால் கைது நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தப்பினார். இவர் கோடீஸ்வரர்.  தொழில் அதிபரான இவர் அரசுக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இவர் மீது மிலன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவர் 2 ஆண்டுகள்  அரசியலில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் அவர் பாராளுமன்றத்தில் செனட் உறுப்பினர் பதவியை இழக்கிறார். இந்தத் தடை காலத்தில் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இதையடுத்து அவருக்கு அரசியல் தடை அல்லது வீட்டுச் சிறை தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.  இதை அவரது வக்கீல் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்