முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. 4 - தமிழக எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேரை கடலோர காவல் படை போலீகாரர் கைது செய்தனர்.

இந்திய கடலோர காவல் படையினர் தமிழக_ஆந்திர கடல் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழக எல்லைக்குள் மீன்படித்து கொண்டு இருந்த 2 இலங்கை படகுகளை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த இலங்கை கண்டியை சேர்ந்த மீனவர்கள் ரஞ்சித், நீல், ஹர்சன், மதுசங்கா, நலின், நிமாஸ், நிலான், சருந்து, மதுசனா, சமீது ஆகிய 10 பேரை கைது செய்தனர். 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 10 பேரும் சென்னை துறைமுக போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்