முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரிக்கு புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.18 - நீலகிரி மாவட்டத்திற்கு புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கூடவே நீலகிரி மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைக்கும் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க,. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:_

நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலும், மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவை பொறுப்பிலும் இருக்கும் பாலநந்தகுமார் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் எஸ்.கலைச்செல்வன் அவர்களும், (குன்னூர் ஒன்றிய கழகச் செயலாளர் பர்லியார் ஊராட்சிமன்றத்தலைவர்), நீலகிரி மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் புத்திசந்திரன் அவர்களும், (குந்தா ஒன்றிய கழகச்செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். 

கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony