முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 26 - டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு டீசல்  லிட்டருக்கு ரூ. 3/-ம், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 50/-ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 2/-ம் விலையை நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ளது. இது, ஏற்கனவே விலைவாசி உயர்வால்  பாதிக்கப்பட்டுள்ள  சாமானிய மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள கடுமையான தாக்குதலாகும். இந்த விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் தொடர்ச்சியாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மீதான இந்த விலை உயர்வு, அனைத்துப்பொருட்களின் விலைகளையும் சங்கிலித் தொடர் போல மேலும் கடுமையாக உயர்த்தும்.
எனவே மத்திய அரசு, ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென்றும்,  இந்த விலைஉயர்வுக்கு எதிராக அனைத்து தரப்பு பொதுமக்களும், ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் வலுவான கண்டனக் குரலை எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்