முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிபொருள் விலை உயர்வு விவசாயிகளை பாதிக்கும்: பா.ஜ.க.

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

ராம்பூர்(உ.பி) ,ஜூன்.27 - எரிபொருட்களின் விலை உயர்வு விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்று பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து இக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி ராம்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

விவசாய உற்பத்தியை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசோ அவர்களை சுரண்டுகிறது. டீசல் விலை, சமையல் கேஸ் விலை எல்லாம் உயர்த்தப்பட்டுள்ளது. தாங்க முடியாத அளவுக்கு இந்த விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. பிறகு எப்படி விவசாயிகள் டீசலை வாங்கி டிராக்டர்களை இயக்க முடியும். இந்த விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 

மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்தி விட்டார்கள். இது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும். நாடு முழுவதும் இதை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். இதே போல் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதியும் சமையல் கேஸ், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்காக மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். 

டீசல் விலை உயர்ந்திருப்பதால் லாரி ஸ்டிரைக் வெடிக்கும் என்று தெரிகிறது. இது குறித்து டெல்லியில் இன்று கூடி லாரி அதிபர்கள் முடிவெடுக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் போராட்டம் அறிவித்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். விலைவாசி உயரும். முட்டை விலை கூட தாறுமாறாக உயர்ந்து விடும். பாவம் இந்திய மக்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்