எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.8 - ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதிமாறனிடம் விளக்கம் கேட்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ. நேற்று முன்தினம் சுப்ரீம்கோர்ட்டில் தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள தி.மு.க. வை சேர்ந்த தயாநிதிமாறன் எம்.பி. குற்றவாளி என்றும் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் குழுமத்திற்கு விற்பனை செய்ய சிவசங்கரவை தயாநிதி மாறன் நிர்ப்பந்தம் செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அதனால் ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதில் தயாநிதி மாறனின் பங்கு குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் சி.பி.ஐ. சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது.
கடந்த 2004-2007-ம் ஆண்டுகளில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்டதில் சில சக்திகள் தலையிட்டுள்ளன என்றும் சி.பி.ஐ. அந்த அறிக்கையில் கூறியுள்ளது. அதனால் சில சாட்சிகளிடம் விசாரணை நடத்திய பிறகும் மற்றும் பலரின் வாக்குமூலத்தை பெற்ற பின்பும் தயாநிதி மாறனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் சி.பி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 2001-2008-ம் ஆண்டுவரை ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக பூர்வாங்க விசாரணையை சி.பி.ஐ. நடத்தி அதை பதிவு செய்துள்ளது. 2001-2008-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணை இன்னும் 3 மாதங்களில் முடிவடைந்துவிடும் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் குறித்த புதிய குற்றச்சாட்டை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்றும் சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. உறுதி அளித்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கர் ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை கண்ட தயாநிதிமாறன் சன் டி.வி. குழுமத்தில் முதலீடு செய்யும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு சிவசங்கரன் மறுத்ததாகவும் தெரிகிறது. அதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நாட்டை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தயாநிதிமாறன் வலியுறுத்தியதாக சிவசங்கரனே சி.பி.ஐ. யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனம் விற்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தேவையான அனைத்து லைசென்ஸ்களையும் தயாநிதிமாறன் வழங்கியுள்ளார். அதேசமயத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு தேவையான ஒருங்கிணைந்த சேவை உரிமங்கள்( யுஏஎஸ் லைசென்ஸ்களை) சுமார் இரண்டாண்டு காலமாக வழங்காமல் தயாநிதிமாறன் இழுத்தடித்து வந்தார் என்றும் சிவசங்கரனே வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஏர்செல் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பிறகு சன் டி.வி. குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. 2ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையில் எந்த ஒரு ஆதிக்க சக்தியும் குறுக்கீடு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சி.பி.ஐ.யை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சன் டி.வி. குழுமத்திற்கு தயாநிதி மாறன் வீட்டில் இருந்து முறைகேடான முறையில் அரசு கேபிள் இணைப்பு கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதிமாறன் ராஜினாமா செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா ராஜினாமா செய்தார். அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் காரணமாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்துள்ளார். தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரை பிரதமர் நீக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கேபிள் இணைப்பு கொடுத்தது தொடர்பாக தயாநிதிமாறன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
- நமது இயக்கத்தை ஒழித்து விடலாம் என்று யார் யாரோ இன்று கிளம்பி இருக்கிறார்கள்: தி.மு.க.வை எந்த கொம்பனும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 புயல் சின்னம் : வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும்
07 Nov 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமட
-
பாதுகாப்பான அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் : வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா
07 Nov 2025டெல்லி : அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2025சென்னை : டி.ஜி.பி. நியமனம் விவகாரம்: 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
07 Nov 2025பாட்னா : பீகார் தேர்தலில் அதிக வாக்குப்பதிவு எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2025.
07 Nov 2025 -
வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
07 Nov 2025பாட்னா, வாக்குத்திருட்டை பீகாரிலும் நடத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் டெல்லியில் வாக்களித்த பா.ஜ.க.
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது
07 Nov 2025பெங்களூரு : பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் என்ஜினீயர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனு மீது நவ. 11-ல் விசாரணை : சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
07 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்
07 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸை தாக்கிய வழக்கில் 8 பேருக்கு ஐகோர்ட் மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
அரசு முறை பயணமாக இன்று முதல் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி முர்மு பயணம்
07 Nov 2025புதுடெல்லி : 6 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை ஜனாதிபதி திரெளபதி முர்மு மேற்கொள்ளவிருக்கிறார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
07 Nov 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கு விற்பனையானது.
-
மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்
07 Nov 2025மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
-
சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: குற்றவாளி ஒருவர் சுட்டுப்பிடிப்பு
07 Nov 2025சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இரண்டு மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிவிட்டு சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சு
-
வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி அவசியம்: நிர்மலா சீதாராமன் தகவல்
07 Nov 2025மும்பை : வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு
07 Nov 2025சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உடல் உறுப்பு தானம் செய்பவர்களை போற்ற தமிழ்நாடு முழுவதும் தியாகச்சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
07 Nov 2025சென்னை, உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என தெரிவித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உடல் உறுப்பு கொடையாள
-
நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை கண்டுபிடித்தது சென்னை ஐ.ஐ.டி.
07 Nov 2025சென்னை : நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
-
'வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
07 Nov 2025புதுடெல்லி : வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
எட்டயபுரம் அருகே விபத்து - 7 பேர் படுகாயம்
07 Nov 2025மதுரை : லாரி மீது பஸ் மோதி விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
அடுத்த வருடம் இந்தியா வருகிறார் அதிபர் ட்ரம்ப்
07 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த வருடம் இந்தியா வருகிறார்.
-
ரஷ்யாவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
07 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை வைத்து வாக்காளித்த பீகார் மக்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து
07 Nov 2025பாட்னா : தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்ததாக பீகார் மாநில வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வா


