முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-வது அணியில் 3,690 பேர் அமர்நாத் புறப்பட்டு சென்றனர்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஜூலை - 11 - அமர்நாத் குகைக் கோவிலுக்கு நேற்று 11 அணியாக 3,690 பேர் புறப்பட்டு சென்றனர். தெற்கு காஷ்மீரில் 13,500 அடி உயரத்தில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள இயற்கை பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29 ம் தேதி துவங்கியது. இதுவரை 10 குழுக்கள் புறப்பட்டு சென்றுள்ள நிலையில் இப்போது 11 வது குழுவில் 3,690 பேர் 119 வாகனங்களில் அமர்நாத் கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்களில் 965 பேர் பெண்கள். 107 பேர் குழந்தைகள்.
இந்த ஆண்டு இந்த அமர்நாத் யாத்திரையின்போது பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக யாத்திரை செல்லும் பாதையில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அமர்நாத் கோவிலுக்கு இந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரை செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்