முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதுங்கு குழியில் தீ விபத்து: 2 ராணுவ அதிகாரிகள் பலி

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஜூலை 23 - காஷ்மீரில் ராணுவ பதுங்குகுழி ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீயில் இரண்டு ராணவ அதிகாரிகள் உடல்கருகி பரிதாபமாக பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் ராணுவ பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. போர் நடக்கும் சமயங்களில் இந்த பதுங்கு குழிகளில் இருந்துதான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவார்கள். இந்த பதுங்கு குழிகளில் கண்ணாடி இழை பதுங்கு குழிகளும் உள்ளன. கண்ணாடி இழை பதுங்கு குழி ஒன்றில் சில ராணுவ அதிகாரிகளும், சில ராணுவ வீரர்களும் தங்கி இருந்தனர். அந்த பதுங்கு குழியில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இதையடுத்து பதுங்கு குழியில் இருந்த ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் உயிர் தப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை தீ சூழ்ந்துவிட்டது. இந்த தீயில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உடல்கருகி பலியானார்கள். இருந்தாலும் 4 ராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்