முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுகிறார்

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.11 - காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டெல்லி மாநில காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்ஷித் நாளை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் தேவையில்லாமல் ரூ.110 கோடிக்கு டெல்லி அரசு செலவு செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இதனையொட்டி முதல்வர் பதவியில் இருந்து ஷீலா தீட்ஷித் பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பா.ஜ. உள்பட எதிரிக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் பாராளுமன்றமே ஸ்தம்பித்துப்போயுள்ளது. முதல்வர் பதவியில் இருந்து விலகக்கோரி நெருக்கடி அதிகரித்து வருகின்ற நேரத்தில் டெல்லி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முதல்வர் ஷீலா தீட்ஷித் நாளை கூட்டியுள்ளார். கூட்டத்தில் தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது. காக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் மக்களிடத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தீட்ஷித் கேட்டுக்கொள்வார். விளையாட்டு போட்டி நடக்கும் சமயத்தில் எந்தமாதிரியான சூழ்நிலையில் அரசு முடிவு எடுத்தது என்பது குறித்தும் கூட்டத்தில் ஷீலா தீட்ஷித் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தமக்கு கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை ரகசியமாக அறிவதற்காகவும் இந்த கூட்டத்தை ஷீலா தீட்ஷித் கூட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்