எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.10 - ஒலிம்பிக் துப்பாக்கிசுடும்போட்டியில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழக போலீசாருக்கு அதி நவீன துப்பாக்கிகள் வாங்க நிதி ஒதுக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அகில இந்திய அளவிலான 11வது போலீஸ் துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:
1991ம் ஆண்டு சென்னையில் அகில இந்திய போலீஸ் பணித்திறன் போட்டி நடந்தபோது நான் புதிதாக ஒரு பரிசுகோப்பையை ஏற்படுத்திய நிகழ்ச்சியை நினைவு கூறுகிறேன். அப்போது தமிழ்நாடு போலீஸ் துப்பாக்கி சுடும் பிரிவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கினேன். 2000, 2004, 2009 ஆண்டுகளில் தமிழக போலீஸ் அணி துப்பாக்கிசுடும் போட்டியில் பரிசு கோப்பையை பெற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போது மீண்டும் அந்தகோப்பையை தமிழ்நாடு பெற்றிருப்பதை எண்ணி மேலும் மகிழ்கிறேன். 1991ம்ஆண்டு நான் முதல் அமைச்சராக பொறுப்பேற்றபோது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தடுக்க போதுமான ஆயுதங்கள் இல்லாமல் தமிழக போலீஸ் இருந்ததை உணர்ந்தேன்.
அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்கப்படவேண்டிய 2ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளே போலீசாரிடம் இருந்தன. ஆனால் அதே நேரத்தில் தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களை வைத்திருந்தனர். அப்போது நான் டெல்லி சென்றநேரத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், உள்துறை மந்திரி எஸ்.பி.சவான், நிதி அமைச்சர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து தமிழக போலீஸ் துறையை நவீனப்படுத்த குறைந்தபட்சம் ரூ.30 கோடியாவது நிதி ஒதுக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தேன்.
மத்திய அரசு கொஞ்சம் நிதி கொடுத்தது. அதைவைத்து ஓரளவுக்கு போலீஸ் துறையை நவீனப்படுத்தினேன்.
போலீசாருக்கு ஏ.கே.47 உள்ளிட்ட நவீன துப்பாக்கிகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள், நவீன வாகனங்கள் வாங்கப்பட்டன.
இவ்வாறு தமிழக போலீஸ்துறை நவீனமாக்கப்பட்டதை பார்த்து இதர மாநிலத்தினரும் தங்கள்போலீஸ் துறையை நவீனப்படுத்த நிதி கேட்க ஆரம்பித்தன.இவ்வாறு போலீஸ்துறையை நவீனமாக்கும் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம்தான்.
போலீஸ்துறையை நவீனமாக்குவதற்கு வித்திட்டது நான் தான் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.
நவீன ஆயதங்களை வாங்குவதுடன் எல்லாம் முடிந்துவிடாது.அத்தகைய நவீன ஆயுதங்களை திறமையாக கையாளுவதுதான் முக்கியம். துப்பாக்கியை கையாளுவது சாதாரண விஷயம் அல்ல. அது நுட்பமான செயலாகும். தீவிரவாதிகளை போலீசார் குறிபார்த்து நுட்பமாக சுட்டு அப்பாவி மக்களை எவ்வித ஆபத்தும் இல்லாமல் பாதுகாத்திடவேண்டும். பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் சிலரை பிடித்துவைத்திருக்கும் சூழ்நிலையில், போலீசார் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தக்கூடாது. அதுபோன்ற நேரத்தில் பிணைக்கைதிகளையும், அப்பாவி மக்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியவேண்டும். அந்தநேரத்தில் ஒரு வினாடியில் போலீசார் எடுக்கும் முடிவு அப்பாவி மக்களின் வாழ்க்கையையும் மரணத்தையும் முடிவு செய்யும்.
இந்த ஆண்டு துப்பாக்கிசுடும் போட்டியில் 9 பெண் போலீசார் கலந்து கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் 1992ம்ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நான் தான் முதல் முதலாக தொடங்கினேன்.
அதைப்போல முதல் முதலாக பெண் கமோண்டோ போலீஸ் பிரிவை தொடங்க உத்தரவிட்டதும் நான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
போலீசாரின் வாழ்க்கை ரோஜா மலர்கள் நிறைந்த படுக்கை அல்ல. காலையில் பணிக்காக வெளியே செல்லும்போலீசார் இரவில் வீடு திரும்புவார்களா என்பது உத்தரவாதம் கிடையாது. ஏதாவது தீவிரவாதிகள் தாக்குதல் என்றால் போலீசாரின் நிலைமைப்பற்றி சொல்லத்தேவையில்லை.
சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் போலீசார் வாகனங்கள்மோதி பலியாகி தன் குடும்பத்தினரை தவிக்கவிட்டு செல்லும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
ராணுவத்தினரும் போலீசாரும் நாட்டுமக்களை பாதுகாக்கும் பாதுகாவலர்கள். வசதிகளும், ஊக்கமும் அளிக்கப்பட்டால் தமிழக போலீசார் உலகில் உள்ள எந்த சிறந்த போலீசாருக்கும் இணையாக செயல்படுவார்கள்.
ஆயுதங்களை போலீசார் கையாளும் திறனை பரிசோதிப்பதற்காக இத்ததைய துப்பாக்கி சுடும்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதேபோல 2007ம் ஆண்டில் இருந்து அகில இந்திய போலீஸ் விளையாட்டு துப்பாக்கிசுடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இது ஒலிம்பிக்கில் நடத்தப்படும் துப்பாக்கி சுடும் போட்டியை போன்றதாகும். இதற்கு .177 அல்லது .22 பிஸ்டல்கள், துப்பாக்கிகள் தேவை. ஆனால் இதெல்லாம் தமிழ்நாடு போலீசில் இல்லை. எனவே தமிழக போலீசார் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும்போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறும் வகையில் இத்தகைய நவீன துப்பாக்கிகள் வாங்க தேவையான நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் மூலம் துப்பாக்கி சுடும் திறனை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
13 May 2024 -
இம்மாதம் வெளியாக உள்ளது 'எலக்சன்'
13 May 2024ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளி
-
ஸ்டார் விமர்சனம்
13 May 2024சின்ன வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்ற கனவோடு நாயகன் கவின் பயணிக்கிறார்.
-
ரசவாதி விமர்சனம்
13 May 2024நாயகன் அர்ஜுன் தாஸ், சித்த மருத்துவர் தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அமைதியான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்கு வருகிறார்.
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.