எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பூவுளகை காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு 9 ராத்திரிகள். அதுவே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பூஜைகளை பகல் நேரத்தில் மேற்கொள்வது வழக்கம். ஆனால் சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும், இரவிலும் பூஜைகள் செய்யப்படுகிறது. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களே சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை தலா 3 நாட்களாக பிரித்து மக்கள் வழிபடுகின்றனர். பிரப்பிரும்மம் ஒன்றே என்றாலும் உலக மக்களுக்காக நன்மை செய்திடும் பொருட்டு துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார். முதல் மூன்று நாட்கள் துர்க்கா சக்தி ரூபமாகவும், 2 வது, 3 வது நாட்களில் லட்சுமி வடிவாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாளை சித்தரித்து மக்கள் வழிபடுகின்றனர். துர்க்கா தேவி துன்பங்களை போக்குபவள். லட்சுமி பொருளாதார நெருக்கடிகளை தீர்த்து வைக்கக் கூடியவள். நல்லறிவு இருந்தால்தான் பூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்பதால் அந்த அறிவை வேண்டி நவராத்திரி விழாவின் நிறைவாக 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.
9 நாட்கள் நிறைவடைந்து 10 வது நாளான விஜயதசமியன்று அம்பிகையானவள் ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிப்பிடுகிறது. அம்பிகையின் விக்ரக ரூபத்திலோ அல்லது படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்திடலாம். 9 நாட்களிலும் தேவி பகவதி பாராயணம் செய்யலாம். சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து அவர்களை தேவியராக கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திறஅகு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழ வேண்டும். இந்த நாட்களில் கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதிப்பது சிறப்பும் மேன்மையையும் தரும். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கு உரிய சிறப்புகளாகும். இது தவிர உலகை காத்து ரட்சிக்கும் ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாகவும் நவராத்திரி விழா அமைகிறது.
அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நவராத்திரியின் போது கொலு வைத்து வழிபடுவதோடு ஆண்டு முழுவதும் அம்பிகையை நம் இதயங்களில் நிரந்தரமாக வைத்து வழிபட வேண்டும். அம்பிகையை சக்தி சொரூபியாக நினைத்து தியானிப்பதால் நமது சகல பாவங்களும் நிவர்த்தியாகி விடும் என்பது நிஜம். இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி விழா வரும் 28 ம் தேதி ஆரம்பமாகிறது.
நவராத்திரி கொலு அமைக்கும் முறைகள்:
மனிதனின் உடல் வலிமை, பராக்கிரமம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளுக்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால்தான் மனிதன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் முப்பெரும் தேவியரான மலைமகள்(துர்க்கை), அலைமகள்(மகாலட்சுமி), கலைமகள்(சரஸ்வதி) ஆகியோருக்கு மூன்று நாட்களாக வழிபடும் முறையும், ஒன்பது நாட்களாக ஒன்பது சக்தியினரை வழிபடும் முறையும் உள்ளது. இதில் ஒன்பது தேவியரின் வழிபாட்டு முறையான
நவராத்திரி கொலு:
நவராத்திரியின் சிறப்பு அம்சமே கொலு வைப்பதாகும். பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதாகும். இதில் கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
1. முதலாம்படி:
முதலாம்படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற ஓரறிவு தாவர வர்க்கங்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
2. இரண்டாம்படி:
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகள் வைக்க வேண்டும்.
3. மூன்றாம்படி:
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
4. நான்காம்படி:
நாலாம்படியில் நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
5. ஐந்தாம்படி:
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
6. ஆறாம்படி:
ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
7. ஏழாம்படி:
மனித நிலையில் இருந்து உயர் நிலையடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகள் வைத்திட வேண்டும்.
8. எட்டாம்படி:
எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
9. ஒன்பதாம்படி:
ஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காக இப்படி கொலு அமைத்திடுவது வழக்கமாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட
-
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்:ஐ.நா. உடனடியாக தலையிட கொலம்பியா வலியுறுத்தல்
03 Jan 2026கராகஸ், வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கொலம்பியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
-
அறநிலையத்துறை சார்பில் ரூ.109 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
03 Jan 2026சென்னை, அறநிலையத்துறை சார்பில் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா
-
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? வெளியான புதிய கருத்து கணிப்பால் பரபரப்பு
03 Jan 2026சென்னை, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ., தமிழகம் முழுவதும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து கருத்துகணிப்பு மேற்கொண்டுள்ளது.
-
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு
03 Jan 2026சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை மேற்கொண்டது.
-
சத்தீஸ்கரில் 2 இடங்களில் என்கவுண்டர்: 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
03 Jan 2026ராய்பூர், சத்தீஸ்கரில் பதுங்கிருந்த 14 நக்சலைட்டுகளை என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-01-2026
03 Jan 2026 -
சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
03 Jan 2026சென்னை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 750 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
03 Jan 2026சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் பட
-
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: ரஷ்யா, ஈரான் கடும் கண்டனம்
03 Jan 2026மாஸ்கோ, வெனிசுலா மீதான தாக்குதலுக்கு கியூபா, கொலம்பியா மற்றும் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது
03 Jan 2026சென்னை, இலங்கை கடற்படையால் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க ராணுவம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Jan 2026நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளை கேட்காமலே நிறைவேறும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு
03 Jan 2026சென்னை, அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் கேட்காமலே நிறைவேறும் தி.மு.க.
-
மராட்டிய உள்ளாட்சி தேர்தல்: 66 இடங்களில் பா.ஜ.க., சிவசேனா கட்சியினர் போட்டியின்றி வெற்றி
03 Jan 2026மும்பை, மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் 66 இடங்களில் பா.ஜ.க., சிவசேனாவை சேர்ந்தவர்கள் போட்டியின்றி வெற்றிப்பெற்றுள்ளனர்.
-
ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி
03 Jan 2026வாஷிங்டன், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
-
வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் துவக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Jan 2026சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.
-
கூட்டணி குறித்து த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையா..? செங்கோட்டையன் விளக்கம்
03 Jan 2026ஈரோடு, விஜய் தான் தமிழகத்தின் முதல்வர் என ஏற்றுக்கொள்கிற கூட்டணிதான் த.வெ.க.வில் இணையும் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன் கூட்டணி குறித்து த.வெ.க.வுடன் காங
-
தகவல்கள், படங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
03 Jan 2026புதுடெல்லி, பதிவு செய்யப்படும் தகவல்கள், படங்களுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
மெக்சிகோவில் நிலநடுக்கம்: 2 பேர் பலி
03 Jan 2026மெக்சிகோ சிட்டி, தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
03 Jan 2026புதுடெல்லி, வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
03 Jan 2026மும்பை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை பி.சி.சி.ஐ. நேற்று அறிவித்தது.
-
தமிழ்நாட்டில் ஜன. 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
03 Jan 2026சென்னை, தமிழகத்தில் நாளை முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கையால் போர் பதற்றம்
03 Jan 2026டெஹ்ரான், ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&nbs
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
03 Jan 2026சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
விதர்பா அணிக்கு எதிராக முதல் சதமடித்த ஹார்திக் ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசல்
03 Jan 2026மும்பை, விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ஹார்திக் பாண்டியாவின் விடியோ வைரலாகி வருகிறது.


