எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி: திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் மிக எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவுக்கு போட்டி கடுமையாகியுள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரான மரியம் பிச்சை விபத்தில் பலியானதால் இடைத் தேர்தல் நடக்கிறது. இந்த இடத்துக்கு தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை, குறிப்பாக மரியம் பிச்சையின் மகனைத் தான் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்துவார் என அந்தக் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், பரஞ்சோதிக்கு வாய்ப்பு தரப்பட்டதால், மரியம் பிச்சை ஆதரவாளர்கள் எரிச்சலில் உள்ளனர். அதே நேரத்தில், முஸ்லீம்கள் மிக அதிகமாக வசிக்கும் இந்தத் தொகுதியில் மரியம் பிச்சை குடும்பத்தினருக்கு வாய்ப்பு தரப்படாவிட்டாலும், இன்னொரு சிறுபான்மையின வேட்பாளரை ஜெயலலிதா நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முஸ்லீ்ம் வேட்பாளரை நிறுத்தாததால் இந்தத் தொகுதியின் சிறுபான்மையினர் மத்தியில் கோபம் நிலவுகிறது. இந்தத் தொகுதியில் கடந்த முறை அதிமுக 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர் கே.என்.நேருவை தோற்கடித்தது. இதில் கணிசமான வாக்குகள் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவுக்குக் கிடைத்த சிறுபான்மையினர் வாக்குகள் ஆகும்.
இந் நிலையில், சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகிய எம்பிக்களை அனுப்பி வைத்ததற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகச் செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், நாங்கள் அதிமுக கூட்டணியில் நீடித்தாலும் கூட நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தந்ததாலும் பிரதிநிதிகளை அனுப்பி வைத்ததாலும், எங்களது சமுதாயத்தினர் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளனர் என்பது நிச்சயமான உண்மை. அதே போல இந்தத் தொகுதியில் ஒரு இஸ்லாமியரை வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அதிமுகவிடம் கேட்டுப் பார்த்தோம். அதையும் அவர்கள் ஏற்கவில்லை. இ்ப்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்சோதி மீது தனிப்பட்ட முறையில் ஏராளமான புகார்கள் உள்ளன (அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது இரண்டாவது மனைவி புகார் கூறியுள்ளார்).
இதனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையான வசிக்கும் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் நேரு வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை என்றார். கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியே, திமுக வெற்றி பெற்றால் ஆச்சரியமில்லை என்று கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்தத் தொகுதியில் அமைச்சராக இருந்தபோது பல நலத் திட்டங்களை நிறைவேற்றியதாலும், தன் மீதான வழக்குகளும் கைது நடவடிக்கையும் பழி வாங்கும் செயலாக மக்களால் பார்க்கப்படுவதாகவும் கே.என்.நேரு நினைக்கிறார்.
இதனால் தனது சமூதாயத்தைச் சேர்ந்த முத்தரையர்களும், முஸ்லீம் ஓட்டுக்களும் தன்னை கரையேற்றிவிடும் என நேரு தரப்பு நம்புகிறது. நேருவின் ஜாமீன் மனு மீது நாளை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இதில் ஜாமீனில் கிடைத்தால், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான வெள்ளிக்கிழமை நேருவே நேரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இங்கு ஜாமீன் கிடைக்காவிட்டால், தேர்தல் தேதிக்கு கடைசி 5 நாட்கள் முன் ஜாமீனில் வந்து பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்திலும் நேரு மனு தாக்கல் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால், திமுக என்ன தான் செய்தாலும் இந்தத் தொகுதியில் வெற்றி கிடைக்காது என அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் திருச்சி நகரச் செயலாளர் ஜெரோம் ஆரேக்கியராஜ் கூறுகையில், நில மோசடி வழக்குகளில் சிக்கித் தவிக்கும் திமுக வேட்பாளருக்கு இங்கு நிச்சயம் வெற்றி கிடைக்காது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட்ட திமுகவுக்கு இந்தத் தொகுதியில் ஒரு காங்கிரஸ் ஓட்டுக் கூட கிடைக்காது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இந்திரஜித் கூறுகையில், அதிமுக முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தாததால் சில இஸ்லாமியர்கள் கோபத்தில் திமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பான்மையான இஸ்லாமிய வாக்குகள் திமுகவுக்குக் கிடைக்காது. இதனால் திமுக வெல்லாது என்றார். இந் நிலையில் திருச்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை கவனிக்க தேர்தல் பணிக் குழுவை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (கழகப் பொருளாளர்),
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), அமைச்சர் என்.ஆர். சிவபதி (திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி இன்று திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அருள்ஜோதி என்பவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலின்போது அமைச்சர் சிவபதி, குமார் எம்பி மற்றும் அதிமுக தொண்டர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 6 hours ago |
ஆனியன்ப்ரை5 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
நான் உயிரோடு இருக்கும்வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பீகார் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
13 May 2024பாட்னா : பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், "நான் உயிருடன் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது" என பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
3 டன் மலர்களை கொண்டு திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்
13 May 2024திருப்பதி, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் 3 டன் மலர்களால் உற்சவர்கள் சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.