எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, மார்ச் - 7 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இந்தியா திணறல் வெற்றியைப் பெற்றது. 10 வது உலக கோப்பையின் பி பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, டெஸ்ட் அந்தஸ்து பெறாத அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதே மைதானத்தில் கடந்த லீக் போட்டியில் இங்கிலாந்தை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த அயர்லாந்து அணி இன்று இந்திய அணியை என்ன செய்ய காத்திருக்கிறதோ என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாக அயர்லாந்து அணியின் கேப்டன் வில்லியம் போர்ட்டர் பீல்டு மற்றும் ஸ்டிர்லிங் களமிறங்கினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கான் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்டிர்லிங் கிளீன்போல்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை ஒரு ரன். இதையடுத்து ஜோய்ஸ் களமிறங்கினார். இவரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஓபிரைன், கேப்டனுடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை நிதானமாக உயர்த்தினார். குறிப்பாக போர்ட்டர்பீல்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 122 க்கு உயர்ந்தபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த ஓபிரைன் 46 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஒயிட்டும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 129 க்கு உயர்ந்தபோது பந்துவீச வந்த யுவராஜ்சிங், 5 ரன்கள் எடுத்திருந்த ஒயிட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். கேட்ச் பிடித்து அவுட்டாக்கியவர் தோனி. அடுத்து கடந்த லீக் போட்டியில் அதிரடியாக சதமடித்து இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த கெவின் ஓபிரைன் களமிறங்கினார். ஆனால் இவரது விக்கெட்டை யுவராஜ்சிங் தானே பந்துவீசி தானே பிடித்து காலி செய்தார். ஓபிரைன் எடுத்த ரன்கள் 9 மட்டுமே. அப்போது அணியின் எண்ணிக்கை 33.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களாக இருந்தது. அடுத்து குசாக், போர்ட்டர்பீல்டுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த போர்ட்டர்பீல்டு 75 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங்கின் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 160. அடுத்து வந்த மூனேயும், யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க அயர்லாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து குசாக்குடன் ஜோடி சேர்ந்தார் ஜான்ஸ்டன். ஆனால் குசாக்கும் 24 ரன்களை எடுத்திருந்தபோது யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்பிற்கு 184. அடுத்து வந்த டோக்ரெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201. ஜோன்ஸ்டன் 17 ரன்களை எடுத்திருந்தபோது முனாப் பட்டேலின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். இதனால் அயர்லாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்தது. ரான்கின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னை எடுத்திருந்தார். இந்திய தரப்பில் யுவராஜ்சிங் அபாரமாக பந்துவீசி 31 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாஹீர்கான் 2 விக்கெட்டுகளையும், முனாப்பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ப்யூஸ் சாவ்லா இந்த போட்டியிலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்கை இந்திய அணி சேஸ் செய்தது. துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் டெண்டுல்கர் களமிறங்கினர்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக சேவாக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்ஸ்டனின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அணியின் எண்ணிக்கை அப்போது 9. அடுத்து டென்டுல்கருடன், காம்பீர் ஜோடி சேர்ந்தார். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வெறும் 10 ரன்களை எடுத்திருந்தபோது காம்பீர் ஜான்ஸ்டனின் பந்தில் குசாக்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அணியின் எண்ணிக்கை 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 24. அடுத்து இளம் வீரர் ஹோக்ளி களமிறங்கினார். இவரும் டென்டுல்கரும் அணியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 87 க்கு உயர்ந்தபோது டென்டுல்கர் 56 பந்துகளில் 38 ரன்களை எடுத்த நிலையில் டோக்ரெலின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து யுவராஜ் களமிறங்கினார். இந்நிலையில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. அப்போது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஹோக்ளி 34 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து அணித் தலைவர் மகேந்திரசிங்தோனி, யுவராஜுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் ஓரளவு சிறப்பானதாக இருந்தது. அணியின் மொத்த ஸ்கோர் 167 ஐ அடைந்தபோது தோனி 34 ரன்களில் டோக்ரெல் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் யூசுப்பதான் களமிறங்கினார். இவரும் யுவராஜ் சிங்கும் வெற்றிக்கு தேவையான ரன்களை கடைசியில் அதிரடியாக சேர்த்தனர். யுவராஜ் சிங் 75 பந்துகளில் அரைசதம் கடந்தார். யூசுப்பதான் 24 பந்துகளில் 30 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணி 46 ஓவர்களில் 210 ரன்களை அடித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அயர்லாந்து தரப்பில் ஜான்ஸ்ட்டன் 2 விக்கெட்டுகளையும், டோக்ரெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக யுவராஜ்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணி 3 போட்டிகளின் முடிவில் 2 வெற்றி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்ததால் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.