முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு நலனுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

தியோரியா, நவ.15 - காங்கிரஸ் கட்சி எப்போதுமே நாட்டு நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். ஜன் ஸ்வபிமான் என்ற யாத்திரையை நடத்தி வரும் பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தியோரியாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் பிரச்சினையில் இருந்து சீனா, வங்காள தேச பிரச்சினைகள் வரை காங்கிரஸ் கட்சி நாட்டு நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது என்றார். 

நாடு சுதந்திரம் பெற்றது முதல் 54 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி , நாட்டு நலனை பொறுத்தவரையில் ஒரு சிறிய சாதனையைக் கூட இதுவரை செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சி லஞ்ச லாவண்யத்தில்தான் ஈடுபட்டு வருகிறது என்றும் வளர்ந்த நாடுகள் வரிசையில் இந்தியாவை கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சி தவறி விட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற தோல்விகளுக்கு காரணமான காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ராஜ்நாத் காட்டமாக கூறினார். நாட்டு மக்களின் நலன்களுக்காக அபிலாஷைகளுக்காக காங்கிரஸ் கட்சி ஒருபோதும் செயல்பட்டதில்லை என்றும் நாட்டு நலனுக்கு எதிராகவே அக்கட்சி செயல்பட்டு வந்திருக்கிறது என்றும் இதை அக்கட்சி மறுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்