முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சாவு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மோத்தாரி, நவ.25 - பீகார் மாநிலத்தில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்ததில் அதில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உடல் கருகி பலியானார்கள். பீகார் மாநிலம் கிழக்கு சம்பராந் மாவட்டத்தில் உள்ள சுராஜ்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். குளிருக்காக போடப்பட்டிருந்த தீயை அணைக்காமல் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது தீ அந்த குடிசை வீட்டின் கூரையில் பிடித்து எரியத்தொடங்கியது.

இந்த தீயில் சிக்கிய 8 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் வசித்துவந்த அகில்குமார் அவரது மனைவி, அவர்களது 6 குழந்தைகள் அனைவரும் பலியானார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்