முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானே புயலில் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கு நிதியுதவி

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 -  தானே புயலில் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை தாக்கிய தானே புயலின் காரணமாக நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுவர் இடந்து விழுந்ததில் 2 பேரும், மழை காரணமாக ஒருவரும், கடலூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேரும், மழை காரணமாக ஒருவரும், தேனி மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவரும் ஆக மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

தானே புயல் மற்றும் மழை காரணமாக மரணமடைந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சும் ரூபாய் உதவித்தொகையை  உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்