முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக இந்தி மாநாடு ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கும்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜன.12 - உலக இந்தி மாநாடு ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாய் தெரிவித்துள்ளார்.  உலக இந்தி தினத்தையொட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாய், அடுத்த உலக இந்தி மாநாடு ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெறும் என்று தெரிவித்தார். இந்தாண்டே இந்த மாநாட்டை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மாநாடு ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும். பிராந்திய இந்தி மொழி மாநாடு இந்த மாதம் ஜப்பானில் நடத்தப்படும். மார்ச் மாதம் ஸ்பெயின் நாட்டில் நடத்தப்படும். இந்தி மொழி வளர்ச்சிக்கு மேலும் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்றும் ரஞ்சன் மாத்தாய் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள இந்திய சேவை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இந்தி மொழியை பயன்படுத்த பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தி மொழி வளர்ச்சியில் திரைப்படம் மற்றும் இசை முக்கிய பங்கு வகித்து வருகிறது என்றும் ரஞ்சன் மாத்தாய் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்