முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி: நிதின்கட்காரி

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

போபால், பிப்.12 - உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்துகொள்வார் என பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி 5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஞ்சாப், உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்களிலும் உ.பி.யில் இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கும் நரேந்திர மோடி அழைக்கப்படவில்லை. எனவே உத்தரபிரதேச மாநிலத்தில் இனி நடக்க இருக்கும் 5 கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காவது நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று உ.பி. பாரதிய ஜனதா கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து நரேந்திரமோடி உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளார் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். அவரது சுற்றுப்பயண விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து பா.ஜ.க.வின் துணைத் தலைவரும் உ.பி. மாநிலத்தவருமான முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவிக்கையில் நரேந்திர மோடியின் வருகை தற்போதைய நிலையில் பா.ஜ.க.விற்கு அவசியம் தேவை என்றார். நரேந்திர மோடியின் பிரச்சாரம் கட்சிக்கு வலுவூட்டுவதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்